Comedy Stories - இனிமேல் உன்னோட வாழ முடியாது!
ஒரு வீட்டுல ஒரு கணவனும் மனைவியும் இருந்தாங்க.
அந்த மனைவிக்கு கணவனுக்கு தன் மேல இருக்கும் அன்பு குறைஞ்சுட்டே வரதா சந்தேகம் வந்தது.
ஒருவேளை அவள் சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டுப் போனா அவன் என்ன செய்வான்னு தெரிஞ்சுக்க ஆசை வந்துச்சு.
அதனால இனிமேல் உன்னோட வாழ முடியாதுன்னு ஒரு லெட்டர் எழுத ஆரம்பிச்சா.
அவளுக்கே அவ செய்றது அற்பத்தனமா தெரிஞ்சது. இருந்தாலும் கணவன் என்ன செய்றான்னு பார்த்து தெரிஞ்சுக்குரதுன்னு முடிவு செய்து எழுதினா.
லெட்டரை எழுதி பெட்ரூம் டேபிள் மேல வச்சுட்டு கணவன் வீடு வர காத்திருந்தா.
கணவன் வரும் அரவம் கேட்டதும் கட்டிலுக்கு அடில போய் ஒளிஞ்சுக்கிட்டா.
தன்னுடைய கணவன் கோபப் படுவான், அல்லது வருத்தப் படுவான்னு ஆர்வத்தோட மூச்சை அடக்கி காத்திருந்தா.
பெட்ரூமுக்கு வந்த கணவனும் டேபிள் மேல இருந்த லெட்டரை எடுத்துப் படிச்சான்.
சில வினாடி அமைதியா இருந்தவன், தொடர்ந்து ஜாலியா விசில் அடிச்சுட்டே, பக்கத்துல இருந்த பேனாவை எடுத்து அதே லெட்டர்ல எழுதினான். லெட்டரையும் பேனாவையும் கீழே வச்சதும் டான்ஸ் கூட ஆடினான்.
அவன் வருத்தப் பட்டதாகவும் தெரியலை, கோபப் பட்டதாகவும் தெரியலை. சந்தோஷப் படுற மாதிரி தான் இருந்தது.
மனைவிக்கோ பயங்கர அதிர்ச்சி! கணவன் இப்படி செய்வான்னு அவ நினைக்கவே இல்லை.
நிலைமையை இன்னும் மோசமாக்குற மாதிரி கணவன் யாருக்கோ போன் போட்டு பேசினான்.
“டார்லிங், நான் இப்போ தான் வந்தேன். இன்னும் கொஞ்ச நேரத்துல அங்கேயே வரேன். அந்த முட்டாளுக்கு இப்போ தான் நான் ஏமாத்துறது தெரிஞ்சது போலருக்கு. என்னை விட்டுட்டுப் போயிட்டா. அவளை கல்யாணம் செஞ்சது உலக மஹா தப்பு. நாம முதலேயே மீட் செய்திருக்கனும் செல்லக்குட்டி.. உன்னைப் பார்க்க தான் கிளம்புறேன். வந்து பேசுறேன். பை டார்லிங்.”
மீண்டும் விசில் அடித்துக் கொண்டே அறையை விட்டு வெளியேறினான் கணவன்.
வாசல் கதவு திறந்து மூடும் சத்தமும் கேட்டது.
கணவன் போய் விட்டது தெரிந்து கட்டிலுக்கு அடியில் இருந்து வெளியே வந்தாள் மனைவி.
அவளுக்கு அழுகையாக வந்தது. அவளுக்கு துரோகம் செய்துக் கொண்டிருக்கும் கணவன் அப்படி என்ன எழுதினான் என்று கடிதத்தை எடுத்துப் படித்தாள்.
“லூஸு பொண்டாட்டி, கட்டிலுக்கு அடில உன் கால் தெரிஞ்சது. உனக்கு பிடிச்ச மிளகா பஜ்ஜி வாங்கிட்டு வரேன். லவ் யூ பொண்டாட்டி.”
😆😆 😆😆 😆😆
😀😀😀😀😀