Comedy Stories - உன் மனைவி மேல எப்படி இவ்வளவு அன்பு?
பாபு தனது நண்பனான ஜோசப்பின் வீட்டிற்குச் சென்று இருந்தான்.
ஜோசப் தனது மனைவியை கையில் வைத்து தாங்குவதுப் போல நடத்துவதைப் பார்த்து வாய் பிளந்து ஆச்சரியப்பட்டான்.
ஜோசப் மனைவியின் சமையலை பாராட்டினான், அவளின் அழகைப் புகழ்ந்தான், அவளைப் பற்றி பெருமையாக எப்போதும் பேசினான்.
“ஜோசப், உனக்கு உன் மனைவி மேல எப்படி இவ்வளவு அன்பு?” என்று பாபு ஆச்சர்யத்துடன் வினவினான்.
“ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி அவளை வாய் திறந்து புகழ்ந்து பாராட்ட ஆரம்பிச்சேன். அதுக்கு அப்புறம் எல்லாமே மாறி போச்சு. எங்க கல்யாண வாழ்க்கையே புதுசாயிடுச்சு. இப்போ நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோம்.” என்றான் ஜோசப்
இதைக் கேட்டதும் பாபுவிற்கும் ஆர்வம் எழுந்தது.
உத்வேகத்துடன், வீட்டிற்கு சென்றான்.
போனதும், மனைவியைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். அவன் அவளை எவ்வளவு காதலிக்கிறான் என்று அவளிடம் சொன்னான்.
“உன்னுடைய நாள் எப்படி போச்சுன்னு சொல்லு,’ என அன்புடன் கேட்டான்.
அடுத்த செகன்ட் அவனுடைய மனைவி கண்ணீர் விட்டு அழுதாள்.
பாபுவிற்கு புரியவில்லை.
“என்ன விஷயம் டார்லிங்?" என்றுக் கேட்டான்.
"இன்னைக்கு ரொம்ப மோசமான நாள்!
காலைல சின்னு சைக்கிள்ல இருந்து கீழே விழுந்து அடியோட வந்திருக்கான்.
கேஸ் காலியாயிடுச்சு, வேற சிலிண்டரும் இல்லை.
திடீர்னு ஏ.ஸி வேற வேலை செய்யலை!
இதெல்லாம் போதாதுன்னு இப்போ நீங்க வேற புதுசா குடிச்சுட்டு வீட்டுக்கு வந்திருக்கீங்க!”
😁😁😁😁
😀😀😀😀😀