(Reading time: 6 - 11 minutes)
Muthu Sippi
Muthu Sippi

ஏமாந்து விட்டேன்' என்று வாய் திறந்து தன் உறவினர் ஒருவருடன் பேசுவது போல் அந்தப் படத் கடன் பேசினாள் பவானி.

  

கொல்லையில் பவழ மல்லிகைப் பூக்கள் உதிர்ந்து கிடந்தன. கூடை நிறைய மலர்களைச் சேர்த்து எடுத்து வந்து பாலை புனைந்து படத்துக்கு அணிவித்தாள் பவானி. அன்றிலிருந்து அவள் துன்பத்தால் வாடும் போதெல்லாம் தன் ஒப்புவமையற்ற புன்னகையால் நட ராஜப் பெருமான் அவளைத் தேற்றி வந்தான்.

  

கல்யாணராமனும் புன்னகை புரிந்து தான் அவளுடைய துயரங்களைக் கேட்கிறார். பார்வதி கவலையும் கஷ்டமும் பட்டுக் கொண்டே அந்தப் பேதைக்கு ஆறுதல் அளிக்கிறாள்.

  

’மூர்த்தி’ என்று நினைத்ததும் பவானியின் மனம் ஒரு வினாடி 'திக்' கென்று அடித்துக்கொண்டது. உடம்பு ஒரு தரம் குப்பென்று வியர்த்தது. அவன் கபடமாகச் சிரிக்கும்போது அதில் வஞ்சகம், சுயநலம், அதர்மம். கோழைத் தனம் இவ்வளவும் குமிழியிடுகின்றனவே என்று நினைத்தாள் பவானி.

  

இவ்வளவு பேர்களுடைய சிரிப்பையும் விட அவளுக்கு நடராஜப் பெருமானின் கொவ்வைச் செவ்வாயின் குமிண் சிரிப்புத்தான் பிடித்திருந்தது. ஆகவே, அவள் அப்பொழுதுதான் அலர்ந்து கொண்டிருந்த நித்திய மல்லிகை மலர்களைப் பறித்து எடுத்துக் கொண்டு வீட் டுக்குள் நுழைந்தாள்.

  

கூடத்தில் ஸ்வாமி படத்தருகில் விளக்கேற்றி விட்டு இரண்டு ஊதுவத்திகளை எடுத்துக் கொளுத்திச் சுவரில் செருகி வைத்தாள். வாழை நாரை எடுத்து வந்து படத்துக்கு நேராக உட்கார்ந்து கூடையிலிருந்த மலர்களைத் தொடுக்க ஆரம்பித்தாள்.

  

அந்த அந்தி வேளையிலே, சற்றே திறந்திருந்த கொல்லைக் கதவை நன்றாகத் திறந்து கொண்டு அசட்டுச் சிரிப்புடன் மூர்த்தி உள்ளே வந்து நின்றான்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.