(Reading time: 11 - 22 minutes)
Verukku neer - Rajam Krishnan
Verukku neer - Rajam Krishnan

பாபா காந்தி அவனுடைய அண்ணன் ரங்கன் - மீசை அற்புதம்!

  

"அக்கா, எல்லாரையும் ஒரு 'க்ரூப்' போட்டோ எடுக்கணும். ஏற்பாடு செய்யுங்கக்கா" என்று கூறும் பிரேமா ஆசிரியை. படகர் வகுப்பைச் சேர்ந்தவள்.

  

இப்போது அணியறையில் புதியதொரு சிரிப்பலை பரவுகிறது.

  

சத்தியத்தையும் கொல்லாமையும், இல்லறத்தையும் துறவறத்தையும் அரசியலையும் அன்பு நெறியையும் அன்றே தம் குறளில் பொதிந்து தந்த தெய்வப் புலவர் தோன்றுகிறார்.

  

"இன்ஜினியர் ஸாரே? அஸ்...லாயி!"

  

துரை தன் சடை முடியைச் சற்றே விலக்கிவிட்டுச் சிரிக்கிறான்.

  

"அப்படியா? இது... (சடைமுடியைக் காட்டி) ரொம்பப் பெரிசில்லை?"

  

"ஆமாம், அதற்கேற்ற உடலில்லை உங்களுக்கு!" என்று உரைக்கிறாள் யமுனா.

  

"தொப்பையில்லை..." என்று துரை மீண்டும் சிரிக்கிறான்.

  

"தப்பு. தெய்வப் புலவர் நீட்டலும் மழித்தலும் வேண்டாமென்று சொன்னவர். அவருக்குச் சடாமுடி, தாடி எல்லாம் இருக்குமா என்பது ஐயத்திற்குரியது. ஆனால் தொந்தி நிச்சயமாக இருக்காது. அருளும் அறிவும் ஒளிரும் அந்தப் புலவர் வற்றிச் சுருங்கிய மெய்யுடன் தான் தோற்றம் தருவார்..." என்று யமுனா நிறுத்துகிறாள்.

  

"அது சரி; இப்ப என்னை என்ன செய்யச் சொல்றீங்க? நான் இந்த வேஷம் போடவா, வேண்டாமா?"

  

"சே, விடக்கூடாது. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே அன்பையும் அறத்தையும் கொல்லமை நெறியையும் அவர் அருளியிருப்பதைக் காட்ட வேண்டும். இந்த முடி, தாடி இரண்டையும் அளவைக் குறைத்தால் நல்லது; இல்லையா அம்மாவா?"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.