"...ஏங்க, கமலம்மா இல்லையா?"
அவர் தாளிலிருந்து கண்களை விலக்கி நிமிர்ந்து பார்க்கிறார்.
"இல்லையே."
"ஊரிலில்லையா?"
"ஆமாம். சுவாமிகளைப் பார்க்க சிருங்கேரி போனார் நேத்துதான்."
"ஓ... வர நாளாகுமா?"
"அதெல்லாம் அம்மா ஒண்ணும் சொல்றதில்லை; என்னன்னு விவரம் தெரிவிச்சா, வந்தா சொல்றேன்."
"இங்கே பெரிய வீட்டிலும் யாருமில்லையா?"
"சின்னவரும் சம்சாரமும் ஜப்பான் போயிருக்கா. பெரியம்மா உள்ளே இருப்பார். யாரைப் பார்க்கணும் நீங்க? ரேகா கூட இன்டர்நேஷனல்னு வந்திருக்கும் 'கெஸ்ட்' கூடப் போயிருக்காப்பல..."
"கமலம்மாவைத்தான் பார்க்க வந்தேன், வேறொண்ணுமில்ல..."
அவள் நடக்கத் திரும்புகிறாள்.
அவளுடைய எளிமையான கோலம், கமலம்மாவிடம் ஏதேனும் உதவி கோரி வரும் ஏழைப் பெண்ணாக அவருக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.
அலட்சியமாக மறுபடியும் நாள்தாளில் கண்களை ஊன்றுகிறார்.