கொடுத்ததா ? நீ கஷ்டப்படும்போது உனக்கு பணம் தந்ததா ? இதை உன் அறை நண்பன் சுகுமார் செய்து இருந்தால் அவன்மேலும் உனக்கு இப்படித்தான் காதல் வந்திருக்குமா ? ஒரு நல்ல நண்பனின் அக்கறையாய்தானே தெரிந்து இருக்கும். அதே உதவியை என் நண்பன் ஆனந்திற்க்கு நான் செய்தால் அது காதலா…. ஏன் நான் பெண் என்பதாலா? அப்போ நட்புகூட பாலினம் பார்த்துதான் வருமா? என் பெண்மையை பார்த்த உன் கண்களுக்கு என் மனதும் அதிலிருந்த உண்மையான நட்பும் தெரியவில்லையா... நான் என் சில அந்தரங்க விஷயங்களை கூட உன்னிடம் பகிர்ந்து இருக்கிறேன். காரணம் நீ என் கண்களுக்கு ஒரு ஆணாக தெரியவில்லை ஒரு நண்பனாக மட்டுமே தெரிந்தாய். ஒரு பெண்ணாக, பெற்றொரிடம் கூட சொல்ல முடியாத சங்கடங்களை நண்பனிடம் மட்டும்தான் சொல்லமுடியும். நீ எனக்கு அப்படிப்பட்ட ஒரு உண்மையான நண்பன்டா… ஆனால் இனிமே உன்னை பார்த்தால் கண்டிப்பாக என் பழைய நண்பன் தெரியமாட்டான். நாம் இனிமே பார்க்க வேண்டாம், பேச வேண்டாம். உனக்கு வேலை கிடைத்துவிட்டது இனி உன் உலகம் மாறும், அந்த மாற்றத்தில் கண்டிப்பாக எல்லாம் மறந்துவிடும். இந்த நொடிமுதல் நானும் உன்னை பற்றி நினைக்கமாட்டேன். காரணம், உன் நினைவு இருக்கும்வரை வேறு உண்மையான நண்பனை என்னால் தேட முடியாது, எல்லோரையும் சந்தேகிக்க தோன்றும். ஸோ இந்த நிமிடம் முதல் என் மனதில், வாழ்வில் உனக்கு இடம் இல்லை.” என்று கூறி எழுந்து சென்றாள். ஆனந்த் சிலையாய் அமர்ந்து இருந்தான். எதிர் திசையில் நடந்து சென்ற ரியா அவன் கண்ணீரால் மறைந்து போனாள்!!!
சிறுகதை - என் ரியா, ஏன் ரியா? - மன்னை சரண்
- Written by: Mannai Saran
- Category: Tamil Short Stories
(Reading time: 4 - 8 minutes)
Page 2 of 2