“ஸ்மைல் செய்துட்டீங்க! க்யூட்!!!!! அப்படியே கல்யாணத்துக்கும் ஓகே சொல்லிடுங்க”
அந்த வினாடியில் சரி என்று சொல்லவில்லை என்றாலும், பிறகு விஷ்வா கேட்ட அம்மாவிடம் சரி என்று தலை அசைத்து வைத்தாள் பிரீத்தி!!!
அந்த மன மாற்றத்தை பற்றி இப்போது நினைத்துப் பார்த்தாலும் அவளுக்கு ஆச்சர்யமாக தான் இருந்தது!!!
ஆனால், எப்படிப் போனது என்றே தெரியாமல் பத்து வருடங்கள் ஓடிப் போய் விட்டது... அஷ்மிதா, அத்வைத் என்று இரண்டு குழந்தைகளும் பிறந்தாகி விட்டது!!!!
யோசனையுடனே பேக்கரி சென்று விஷ்வாவிற்கு பிடித்த சாக்லேட் கேக்கில் அவன் பெயர் எழுதி வாங்கிக் கொண்டாள்.
கூடவே அவனுக்கு பிடித்த சாக்லேட்கள் மற்றும் ஸ்வீட்களும் வாங்கினாள்...!
அவனுக்கு பிடித்த ஸ்வீட் என்ற உடனே போர்ன்விட்டா ஞாபகம் வந்தது...
புன்னகையுடனே பேக்கரியை விட்டு வந்தவள், விஷ்வாவைப் பற்றி யோசித்தபடியே சாலையில் நடந்தாள்... அவர்களுக்கு திருமணமாகி மூன்று நாட்கள் ஆகி இருக்கும்....
“விஷ்வா... என்ன இது????!!!!”
“போர்ன்விட்டா டியர். உனக்கு வேணுமா???”
விஷ்வாவின் கையில் ஒரு சின்ன தட்டும், ஸ்பூனும்! அதில் நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய போர்ன்விட்டா! அதை அவன் சாப்பிட்டதின் அறிகுறியாக அவனுடைய உதடுகளில், இப்போதும் போர்ன்விட்டா! மீசையில் கூட கொஞ்சம் ஒட்டிக் கொண்டு இருந்தது!