சிறுகதை - உன் தம்பியை பார்! - ரவை
"ரகு! சாப்பிட வா!"
" எனக்கு பசிக்கலே, அப்புறம் சாப்பிடறேன், நீங்க சாப்பிடுங்க!"
டைனிங் டேபிளில், குடும்பமே சாப்பிட அமர்ந்திருந்தது.
தாய் தாமரைக்கு கடைக்குட்டி ரகுவின்மீது கொள்ளைப் பாசம்!
அவளுக்குப் பிறந்த
நால்வரில், முதலிரண்டும் பெண்கள்! பின் இரண்டும் பிள்ளைகள்! விசு, ரகு!
விசுவுக்கும் ரகுவிற்கும் இடையே வயது வித்தியாசம், இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவு!
அதனால் தானோ, என்னவோ, விசு சவலைக் குழந்தையாக, உடலில் சதைப்பற்று இல்லாதவனாக, மெலிந்து தெரிந்தான்.
அத்துடன் அல்லாது, மூளை வளர்ச்சியும் சற்று குறைவு! தம்பி ரகு படிக்கிற ஏழாம் வகுப்பிலேயே அவனும் படிக்கிறான் என்றால், புரிந்துகொள்ளுங்களேன்!
அதைவிட, குறிப்பாக எல்லா பாடங்களிலும், ரகு முதல் மார்க் வாங்குவான், விசுதான் வகுப்பிலேயே கடைசி மார்க் மாணவன்!
டாக்டரிடம் விசுவுக்கு சிகிச்சை அளித்தும் டானிக் குடிக்கச் செய்தும், அவனை வீட்டில் எல்லோரும் விசேஷமாக பிரியத்துடன் நடத்தினாலும், அவனிடம் எந்த முன்னேற்றமும் இல்லை!
சரி போகட்டும்! காலப்போக்கில் சரியாகிவிடும் என குடும்பம் சமாதானப் படுத்திக் கொண்டது!
இந்தச் சூழ்நிலையில்தான், தாய் தாமரை ரகுவிடம் சில மாறுதல்களை கண்டாள்!
படிப்பில் அவன் இப்போதெல்லாம் கவனம் செலுத்தாமல், விளையாட்டில் அதிகமாக ஈடுபட்டான். சிறுபிள்ளைதானே என முதலில் சில நாட்கள் தாய் தாமரை அதை பாராட்டவில்லை!
அரையாண்டுத் தேர்வில், ரகு பெற்ற மதிப்பெண்களை அறிந்ததும், தாய் மனதில் ஏதோ நெருடியது!
ஆச்சரியம் என்னவெனில், விசு அவனைவிட அதிக மதிப்பெண் பெற்றிருந்ததே!
அதைவிட ஆச்சரியம், விசுவின் மதிப்பெண்களை பார்த்துவிட்டு, விசுவைவிட அதிகமாக சந்தோஷப்பட்டது, ரகுதான்.
ஒரே குதிப்பு, அண்ணனை கட்டியணைத்து முத்தம் தருவது, கை குலுக்கி பாராட்டுவது......!
இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் ரகு மதியவேளை உணவை முற்றிலும் தவிர்த்துவிட்டான். காலை உணவும் டின்னரும்கூட வெகு குறைவாகவே உண்டான்.
அவன் உடலில் அதற்கான மாறுதல் தெரிந்தது. இளைத்து கருத்து விசுவைப்போல்