(Reading time: 3 - 6 minutes)

கடுபேத்துறாங்க மை லார்ட் - ஷரோன்

This is entry #58 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

chandrababu

ரௌதிரமே உருவாய்..

கண்கள் சிவக்க..

கன்னம் துடிக்க..

மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க..

சொடக்கு போட்ட படி..

பொறி கிளம்ப பேசினான் அவன்.....

“ டேய், நீ எவ்ளோ பெரிய ரௌடியா இருந்தாலும், எனக்கு பயம் இல்லடா. அமைதியா இருக்கானே இவன் நம்மல என்ன பண்ணிடுவானு நினைச்சு தான என்னை சீண்டின.

மேலோடமா பார்த்தா தான் டா நான் சைலண்ட், நிஜத்துல பயங்கர வைலன்ட்டு. உன் ஆளுங்க ஆயிரம் பேர் வந்தாலும் அஸால்டா தூக்குவேண்டா நான்.

இத்தனா நாளாய் இந்த அருண்- அ பார்த்த நீ, இனிமே இந்த அருணுக்குள்ள இருக்குற அர்னால்ட பார்ப்படா. உன்னை கைமா பண்ணுறேன் பாரு.

இந்த நாள்-ஐ உன் செல்போன் கலண்டர்ல மார்க் பண்ணி வச்சுக்கோ. இதே நாள் அடுத்த வருஷம், உன் ப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல முக்காவாசி பேர் உயிரோட இருக்க மாடங்க டா.

எண்ணெய் சட்டில போட்டு வறுக்குறது, நடு கடல்ல தள்ளுறது, அம்மி உரல் எல்லாம் தலைல போட்டு தாக்குறது... இப்படி பல ஸ்கெட்ச் கை வசம் இருக்கு. உங்களை எல்லாம்.. சம்பேஸ்தாணுரா...

இது எதுவும் நடக்க கூடாதுனா, ஒழுங்கு மரியதையா உன் குடும்பத்தை கூடிட்டு ஊரை விட்டு போய்டு. போனா போகுதுனு மன்னிச்சுடுறேன். இல்லைனா உன்னை காப்பாத்த எவனாலையும் முடியாது. ஏன் னா, இந்த உலகத்தை காப்பாத்துற கடமை எனக்கு இருக்கு டா, டால்டா டப்பி”

டெரராக(?) பேசி முடித்திருந்தான் அவன்.

அடுத்த நொடி, பல கைத்தட்டல்கள்.

வீட்டில் உள்ள மெகா சைஸ் ஸ்க்ரீனில் ஓடிக் கொண்டிருந்தது அந்த திரைப்படம்.

தன் படத்திலிருந்து மிக பெரிய ஹிட் ஆன ஸீனை ஒட விட்டு ஒய்யாரமாக உட்கார்ந்திருந்தான் அதிரடி மன்னன் என்று அழைக்கப்படும் சந்தோஷ் குமார்.

“ தலைவரே.. உங்களுக்கு இணை நீங்க மட்டும் தான் “ இது ஒரு ஜிங்க்.

“ உங்க நடிப்பு திறனுக்கு அடுத்து ஹாலிவுட் படம் தான் ஜி “ இது மற்றொரு ஜாங்க்.

“ ஒகே ஒகே.. எனக்கு புகழ்ச்சி பிடிக்காது டா. விடுங்க விடுங்க. இது

எல்லாம் எனக்கு ஜுஜுபி “ அவன் ஜால்ராக்களை அடக்கினான் சந்தோஷ் குமார்.

ங்கள் கல்லூரியில் நடக்கும் கலை நிகழ்ச்சிக்கு சந்தோஷை சிறப்பு விருந்தினராக அழைக்க வந்திருந்தனர் ராகுலும் பிரபுவும்.

அவர்கள் அங்கு வந்து சேர,

“ தலைவர் டூ மினிட்ஸ்ல. ஃப்ரெஷாகிட்டு வந்துடுவாரு. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்றான் அந்த ஜால்ராக்களில் ஒருவன்.

வந்தவர்கள் கையில் கிடைத்த நாளிதழ்களோடு அமர,

“ ஜானூனூனூனூ... “ என்று அலறினான் சந்தோஷ். ஜால்ராக்களும் இவர்களும் அறையை நோக்கி ஓட, அதற்குள் பதறி அடித்து வந்த மனைவி ஜானகியிடம்,

“ ஜானு உள்ள கரப்பான். கொஞ்சம் பாரேன் “ என்று கெஞ்சிக் கொண்டிருப்பதை அநியாயமாக கேட்க நேர்ந்தது.

தலையில் அடித்துக் கொண்டு திரும்பிய ராகுல்,

“ இந்த மனுஷன் தான, இந்தியா கிட்ட மோதுற பாகிஸ்தான் தீவிரவாதிங்கள பன்சராக்கி பஞ்சா பறக்க விடுவேன் பன்ச் பேசுனவரு “

பிரபு, “ ஆமா டா. அந்த படத்த முந்திகிட்டு முதல் ஷோ பார்த்த நல் உள்ளங்கள நானும் ஒருத்தன். கடைசில இப்படி பூச்சிக்கு போய்... சே..நல்ல வெளில சீன் ஒட்டுறாரு இந்த மனுஷன் ”

நொந்துக்கொண்டே வீட்டின் வாசலை அடைய, அங்கு சந்தோஷை காண காத்திருந்த ரசிகர்களில் ஒருவன்,

“ அடுத்த ஒபாமா நீ தான் தலைவாவாவா...... “ என்று கூவினான்.

ஒரே நொடியில் இருவரும் திரும்பி பார்க்க, பிரபு “இவன் எல்லாம் நல்லா வருவான் டா.. “

ராகுல் அருகில் இருந்த சுவற்றில் முட்டியப்படி

“ ஷப்பா.... உள்ளதையே காப்பாத்த முடிலையாம், இதுல உலகத்தை வேறயா... தூக்கிப் போட்டு மிதிக்கனும் டா இவனெல்லாம். காலையிலயே கடுபேத்துறாங்க மை லார்ட். “ 

This is entry #58 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.