(Reading time: 2 - 3 minutes)

சொல்லடி என் பிரியசகி - கிருஷ்ண பாபு

Love

ன்டா என்னையே குறுகுறுனு பார்க்குற?'

'என்னை முதல்தடவை பார்த்தப்போ என்னடி நினைச்ச?'

'எத்தினிவாட்டிடா இதக் கேப்ப? பைக்ல இடிக்குறாப்ல போகுதே இந்த மாடு,அறிவே கிடையாதோனு நினைச்சேன்!'

'நான் உன்கிட்ட லவ்வ ப்ரபோஸ் பண்ணப்ப என்னடி நினைச்ச?'

'மீசையே முளைக்கல அதுக்குள்ள இந்த ராஸ்கலுக்கு என்னா தெனாவட்டுனு நினைச்சேன்.'

'பிறகு ஏன்டி என்னை லவ் பண்ணுன?'

'ஒளிச்சுப் பேசாத உன் கண்ணு பண்ணுன வேலைடா அது மக்குப்பையா!'

'ஏன்டா இவனை லவ் பண்ணினோம்னு தோணிருக்கா என்னிக்காவது?'

'முதல்முறை உன் சேலரிய நீ சொன்னதும் தோணிச்சு.ஆனா அப்புறம் உன் கேரியரை நான் ஷேப் பண்ணியதும் நீ கொடுத்த டெடிகேஷனில் தௌஸண்ட் டைம்ஸ் லவ் ஏறிப்போச்சுடா என் அன்புக்கணவா!'

'உன்னை முதல்தடவை கிஸ் பண்ணுனப்போ என்ன சொன்ன ஞாபகம் இருக்கா?'

'ஏன் இல்லாம?முகம் சிவந்து ஷாக் அடிச்சாப்ல உடலும் மனசும் கிறங்கி இப்டியே செத்துடலாம் போல இருக்குனு சொன்னேன்!'

'இந்தப் படம் பார்த்து சாவுறதுக்கு இப்டியே சாகலாம்னு பின்சீட்டு இருட்டுல யாரோ சொன்னதும் பயந்து உடனே கெளம்பிட்டோம். ஞாபகமிருக்கா?'

'ம்ம்..'

'அந்தப் படத்தை இப்போ டிவியில போடறான்.அதான் உன் ஞாபகம் வந்துடுச்சு டியர்!'

'சரிசரி,யாராவது பார்த்துடப் போறாங்க!சீக்கிரம் போங்க!'

கண்ணை துடைத்தபடி சூட்கேஸில் மனைவி படத்தை வைத்து மூடிவிட்டு ஹாலுக்கு விரைந்தார் முதியோர் இல்ல தாத்தா.

பாட்டி போட்டோவில் துளிர்த்தது கண்ணீர்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.