ஒரு கடிதம் எழுதினேன் - கிருஷ்ண பாபு
மாப்ள,வாலன்டைன் டேக்கு என் ஆளுக்கு கொடுக்க நல்லதா நாலு வரி எழுதிக் கொடேன்!'
'சரி,ஆனா சக்சஸ்னா ட்ரீட் வைக்கணும்!'
'நீ மொதல்ல எழுது. சாத்து விழுந்தாலும் ட்ரீட் தர்ரேன். போதுமா?'
'உன் உதடுகளில் நனைந்து கிளம்பிய
என் பெயர்
என் செவி சேர்ந்ததும் மடல்களைச்
சூடாக்கும் மர்மம் என்னடி?'
'ம்? என் காது என்ன இன்டக்ஷன் அடுப்பாடா? இன்னும் நல்லா எழுதேன்.'
'உண்மை போல் தோன்றும்
உறவுகள் உண்மையல்ல.
என்
காதல் போல் வேறொன்றும்
உயரமல்ல.
மண் பிளவா விதைகள் பூமியில்
முளைப்பதில்லை.
உன்
கண் உறவாக நானன்றி யாரும்
பிறக்கவில்லை.'
'இது கொஞ்சம் ஓகே. நானே என் கைப்பட எழுதிக் கொடுத்துக்கறேன்!'
'ஓகே.ஆனா ட்ரீட் ஞாபகம்!'
'என்னடா கன்னம் வீங்கிருக்கு?'
'என்னான்னே புரியல!பிரிச்சுப் படிச்சதும் பிரிச்செடுத்துட்டா மாப்ள!'
'கொடு பார்ப்போம்!'
'கடைசி வரில கண்ணை ஏன்டா கண்மணினு மாத்துன?'
'இன்னும் பெட்டரா இருக்கும்னு தோணுச்சு! தப்பாடா?'
'அடப்பாவி! கண்மணி அவ தங்கச்சி பேருடா!'
{kunena_discuss:785}