முத்தமிடவா - கிருஷ்ண பாபு
என்னை அப்படிப் பார்க்காதே!'
'ஏன்?'
'தோற்று அனைத்தையும் இழந்தவன் கண்களில் புலியின் வெறி தெரியாது. பசித்த நாய்தான் தெரியும்!'
'ஏன் இவ்வளவு விரக்தி?'
'ப்ச்…தோல்வியின் வலி உனக்குப் புரியாது!'
'சரி,கொஞ்ச நேரம் கண்களை மூடேன்!'
'ஏன்?'
'கேள்வி கேட்காதே! என் கையை இறுகப் பிடித்துக்கொள்!'
'ஏன்?'
'காரணமாகத்தான்…'
'சரி!'
'இன்னும் இறுக்கி……'
'ம்'
'இன்னும்……'
'ம்'
'இப்போது என்னை அணைத்து ஒரு முத்தம் கொடேன்!'
'உன்னையா? ம்ஹூம்!'
'யோசிக்காதே! என்னை உன் காதலியாய் நினைத்துக்கொள்! உன் முத்தம் சொல்ல வேண்டும் இளவரசி மீதான உன் காதலை!'
'மனதில் காதலும் வீரமும் ஊற்றாய் கிளம்புகிறது உன் பேச்சினால்!'
'ம்…சீக்கிரம்!'
'இதோ!'
'என்ன தோன்றியது?'
'நரம்புகள் முறுக்கேறின! உடல் முழுதும் புது ரத்தம் பாய்ந்தது போல பிரமை!'
'அதேதான்! இன்னும் வெறித்தனமாக என்னைக் காதலி!மீட்போம் வெற்றிகளை!'
கண்களில் புது வெறி மின்ன வாளினை மீண்டும் முத்தமிட்ட பின் உறையிலிட்டுக் கிளம்பினான் இளவரசன்.
{kunena_discuss:785}