(Reading time: 2 - 4 minutes)

புதுக் கள்ளன் - ஜான்சி

ரு ஊரில ஒரு கள்ளன் இருந்தானாம். அவன் பல வருடமா களவு செய்து தேர்ச்சி பெற்றவனாக இருந்தானாம். அவன் கிட்ட சிஷ்யனாக ஒரு புதுக் கள்ளன் சேர்ந்தானாம்.அவன் முதன் முதலில் ஒரு வீட்டில் களவு எடுக்கச் சென்றானாம். அதனால் போறதுக்கு முன்னாடி தன்னோட குருவிடம் ஆசிப் பெற்றுக் கொண்டவன். தன்னுடைய முதல் களவுக்கு டிப்ஸ் கேட்டானாம்.

“குருவே”

“என்ன சிஷ்யா?”

“நான் களவு எடுக்கப் போகும் வீட்டில் எப்படிப் பட்டப் பொருளைக் களவு எடுக்க வேண்டும் குருவே?”

“அந்த வீட்டில் எது மிகவும் கனமாக இருக்கிறதோ அதை எடுத்து வா சிஷ்யா”

“அப்படியே ஆகட்டும் குருவே” என்றுச் சொல்லி விடைப் பெற்றுச் சென்றான்.

 ன்றைய இரவு அவன் களவு எடுக்கச் சென்ற வீட்டில் எல்லோரும் மிகவும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவன் முதலில் போய் அந்த வீட்டின் சமையலறையில் பாத்திரங்களைத் தூக்கிப் பார்த்தான். அவற்றில் எதுவும் கனமாக இல்லை.

 அடுத்ததாக அவர்கள் துணியை கட்டி வைத்திருந்த பொதியைத் தூக்கிப் பார்த்தான். ம்ஹீம்…… இதுவும் அதுவும் கூட கனமாக இல்லை. அடுத்து எதை தூக்கிப் பார்க்கலாம் என்று அங்கிருந்து நகர்ந்தவன் கண்ணில் அந்த வீட்டு ஆட்டு உரல் பட்டது. அதனை தூக்கிப் பார்த்தான். அவனால் அதைத் தூக்கவே முடியவில்லை.

 "ஆஹா, நம் குரு சொன்ன கனமான பொருள் இதுதான் போல", என்று எண்ணியவன் தான் அதை எடுத்துச் செல்ல முடிவுச் செய்தான்.

 அந்த ஆட்டு உரல் தரையோடு தரையாக பதிக்கப் பட்டு இருந்தது. எவ்வளவு முயன்றும் அவனால் அதை எடுக்க முடியவில்லை. அப்போது தான் அவனுக்கு அந்த யோசனைத் தோன்றியது.

 உடனே அவன் தலை முதல் கால் வரைப் போர்த்திக் கொண்டு அசந்து தூங்கிக் கொண்டிருந்த அந்த வீட்டின் தலைவரை எழுப்பினான். தூக்க கலக்கத்தில் எழும்பிய அவரிடம்,

“ஐயா எனக்கு ஒரு உதவி தேவை, நான் உங்க வீட்டுக்கு திருடலான்னு வந்தேன். என்னால இந்த ஆட்டு உரலை எடுக்க முடியவில்லை அதனால கொஞ்சம் அதை எனக்கு எடுத்து தருகிறீர்களா? என்றுக் கேட்டான்.

அடுத்ததா என்ன நடந்திருக்கும்னு உங்க யூகத்துக்கே விட்டு விடுகிறேன் ஹி ஹீ……

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.