(Reading time: 1 - 2 minutes)

சம்மதமோ இனி சாகசமோ - கிருஷ்ண பாபு

princess

ளவரசியை குதிரையில் கடத்தி புயல் வேகத்தில் பறந்தான் இளவரசன்.

'கண்ணே,வெகுநாள் கனவு இது! உனக்கும் சம்மதம்தானே?' கண் மூடி ரசனையாய் கேட்டான்.

பதிலொன்றும் கூறவில்லை அவள்.

வழியெங்கும் அவள் அழகை வர்ணித்தவாறே வந்தான்.

பதிலொன்றும் கூறவில்லை அவள்.

அரண்மனை அடைந்தது புரவி.

பனித்துளி படிந்த ரோஜாவாய் அவளை மிருதுவாக தூக்கி மஞ்சத்தில் இட்டான். இறுக்கி அணைத்தபடி தூங்கியும் போனான்.

மெல்ல எழுந்தாள்.

பூனை போல் நடந்து ஓர் அறைக் கதவைத் தட்டினாள்.

அடித்துப் புரண்டு எழுந்தவரிடம் கத்தினாள்.

'அரண்மனையைச் சுற்றி ஓடி ஓடி குதிரையும், புளித்துப் போன வசனங்களைக் கேட்டு கேட்டு நானும் நொந்து நூலாகிவிட்டோம்.

என்றுதான் குணமாகும் இந்த இம்சை இளவரசரின் தூக்கத்தில் கடத்தும் வியாதி?!'

மண்டையைச் சொறிந்தார் அரண்மனை வைத்தியர்!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.