மூன்று வேதாளமும் விக்ரமாதித்யனும் - கிருஷ்ண பாபு
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்யன் வேதாளத்தை தோளில் தூக்க விரைந்தான்.
என்ன ஆச்சர்யம்!அங்கே மூன்று வேதாளங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. சிரித்தவாறே முதல் வேதாளம் கூறியது:
'விக்ரமாதித்யா!எங்களில் ஒன்றே நீ வழக்கமாக தூக்கும் வேதாளம்! அங்கேயே நின்று அது எது என கண்டுபிடிக்க வேண்டும் நீ! தவறினால் உன் தலை சுக்குநூறாய் வெடிக்கும்!'
விக்ரமாதித்யன் குழப்பமானான். எந்த ஆங்கிளில் இருந்து பார்த்தாலும் மூன்றுமே வெள்ளை லெகின்ஸ் போட்ட வடிவுக்கரசி போலவே இருந்தன.
பட்டென கேட்டான்.
'கண்டுபிடித்தால்?'
கோன் பனேகா குரோர்பதி கோடி ரூபாய் கேள்வியின் ஈசி விடை போல சட்டென இரண்டாவது வேதாளம் சொன்னது:
'நான் உன்னோடு வந்துவிடுவேன்!'
'ஹாஹாஹா!அட அறிவுகெட்ட வேதாளமே!அப்போ நீதான் அது!'
விக்ரமாதித்தனின் சரியான இந்த பதிலால் அவன் மௌனம் கலைந்தது.
அசல் வேதாளத்தை மற்ற இரண்டும் செவவாயை நெருங்கும் மங்கள்யாண் போல வேகமாக வந்தன.
'வேணாம்,அடிக்கக் கூடாது,அடுத்த தடவை புத்திசாலியாக முயற்சி பண்றேன்!'
'உன்னால் அது இந்த ஜென்மத்தில்(!) முடியாது!'எனக் கூறி இரண்டும் மெல்ல
நெருங்கி
நெருங்கி
நெருங்கி
.
.
.
.
அடித்து எழுப்பின……ர்.
'அப்பா!எழுந்திரிங்க,மணி ஆறு!'
என் முன்னால் நான் பெற்ற என் இரண்டி வாலுகள் இருந்தனர்.
'ஙே' என முழித்து எழுந்தேன்.
{kunena_discuss:785}