அதற்கும் , அதெல்லாம் இல்ல போ லூசுன்னு சொல்லுது..
யோசனையாய் படுத்திருந்த என் அருகில் வந்தான் சத்யன்.
“அக்கா..” கூப்பிட்டான்.
“என்ன??” எனறேன் கோபக்குரலுடன்.
“ஏன்கா என்ன நம்ப மாட்ற?
“நான் உன்ன நம்பாம இல்ல, நீதான் என்ன நம்ப மாட்ற.. என்ன விட்டு விலகி போற..”
“ஐய்யோ அக்கா, இப்போ என்ன அதுல என்ன இருக்குன்னு தான சொல்லனும், சொல்லுறேன்..” என்றபடி சொல்ல ஆரம்பித்தான்.
“என் ஆபீஸ் கொலீக் ஒருத்தர், வாட்ஸ்அப்ல 'ஒரு மாதிரி' யான குரூப்பில் என்ன சேர்த்து விட்டாரு.. நானும் ஒரு நூறு தடவ எக்சிட் ஆயிட்டேன்.. ஆனா அவரு விக்ரமாதித்தன் வேதாளம் மாறி திரும்பத் திரும்ப சேர்க்கிறார்.. நான் டைரக்டா சொல்லிட்டேன்..அப்பவும் கேக்க மாட்றாரு.. அவர் மத்தபடி நல்லவர்தான்... அவர திட்டி கஷ்டபடுத்த இஷ்டமில்ல அதனால அப்படியே விட்டுட்டேன்..அந்த குருப்ப ம்யூட்லயும் போட்டுட்டேன் இருந்தாலும்..
நீ வாட்ஸ்அப்ல அந்த க்ரூப்ப பாத்தா, என்ன தப்பா நினைச்சுப்பயோன்னுதான் சொல்லல அத காட்டல.. ஆனா நீ என்னடானா அத காட்டலன்னு என்ன தப்பா நினைக்குற..”
"அப்ப நைட் 12வர ஆன்லைன்ல இருக்றது., அப்பறம் செல்ல நேண்டுறதுலாம் என்ன காரணம்..."
"ஏய்ய்ய்ய் லுசு மீனூ அக்கா.. சில நேரம் வாட்ஸப்ப பாத்துட்டு இருக்கும் போதே தூங்கிருவேன்.. அதான் ஆன்லைன்னு காட்டும்.. ஆபிஸ் லீவ் போட்டு வந்தாலும் மெயில் செக் பண்ணும்... டவுட் கேட்டா சொல்லனும்..அதான் செல்ல பாக்குறது .... எனக்கு லவ் லாம் கிடையாதுகா... கூட வேல பாக்குற பொண்ணுங்க என்ன அண்ணானுதா கூப்புடுவாங்க.. அப்பறம் எப்படி லவ் கிவ்வுன்னு பண்ண.. நீ மட்டும் தான் என் ப்ரெண்ட் என்னோட பெஸ்ட் ப்ரெண்ட்... வேற யாரும் இல்ல போதுமா..?? கேள்ஸ்ல மட்டும் இல்ல பாய்ஸ்ல கூட உன்கிட்ட பழகும் அளவு பிரண்ட்ஸ் கிடையாது. இவ்வளவு சொல்லியும் உனக்கு இன்னும் சந்தேகம்னா தயவு செஞ்சி என்ட ஜென்மத்துக்கும் பேசாத", என கோவமாய் சொல்லி விட்டு சென்றுவிட்டான்..
‘ ஐய்யயோ, இப்படி என் தம்பிய தங்க கம்பியை என்ன உலகமா நினைக்கற பயல போய் தப்பா நினைச்சுட்டோமே’ன்னு டண் டண்னாய் முகத்தில் வழிந்ததை துடைத்தபடி.. ‘ஐய்யோ, இவன எப்டி சமாதானபடுத்து, ஐஸ்க்ரீம் வாங்கலாமா இல்ல லாலிபாப் வாங்கிதரலாமா’ ன்னு யோசித்தவாறே..
“டேய் டேய்... சாரிடா ... “ என அவனை நோக்கியவாறே சமாதானபடுத்த விரைந்தேன் நான்....
This is entry #04 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - நட்பு
எழுத்தாளர் - விமலா தேவி
{kunena_discuss:1083}