(Reading time: 7 - 14 minutes)

ரு வழியாக இரவு உணவை முடித்து கொண்டு தங்களது அறைக்கு வந்தவன் உறைந்துவிட்டான்.

அவனை பின்னிருந்து அனைத்து இருந்தாள் மீரா.விஷ்வாவிற்கு ஒன்றும் புரியவில்லை.அவள் எதற்கு கோவப்பட்டாள்,இப்ப எதற்கு இப்படி நடந்துக்குறா . ஆனால், ஒன்னும் மட்டும் புரிந்தது அவள் அவனை மிகவும் நேசிகுறானு.

“ஹே...மீராகுட்டி,என்னடா..?”,என்று அவளை முன்புறம் கொண்டுவந்து கேட்டான்.

“....”

“ஹே,என்னடா...”

“அது....”

“சொல்லுமா...”

“ I love u da, I love u so much da புருஷா...”என்று கூறி அவனின் உயரத்திற்கு எக்கி அவன் இதழ்களில் தன் இதழை ஒற்றி எடுத்தாள்.அவன் முகம் பார்க்காமல்அவனது மார்பிலே ஒன்றினாள்.

“ஆஆஆ....”

“என்னடா,ஏன் கத்துற..”

“நீ சொன்னது உண்மையான்னு பார்க்க என்ன கிள்ளிப் பார்த்தேன் அதான்..”

“டேய்...”

“பின்ன என்னடி பண்ண சொல்லுற நான் உனக்கு புடிச்ச கிப்ட்லா வாங்கி தந்தப்ப கூட ஒன்னும் சொல்லுல, நம்ப கல்யாணம் ஆன பிறகு இப்பதான் முதல் முறை சொல்லுற...,நல்லாதான இருக்க .. தீபாவளி பலகாரம் சாப்பிட்டு..எதாவது.....”

“டேய்.....” அவனது நெஞ்சிலே குத்தினாள் மீரா.

“ஹே...போதும்டி...”என்றபடியே அவள் இதழ்களை நோக்கி குனிந்தான் விஷ்வா.அவனது இதழில் தனது கைகளை வைத்து தடுத்தாள்.

“என்னடி....”

“ சாரிடா புருஷா”

“ஏன்டி..”

“நீ என்ன பொண்ணுபார்க்க வந்தப்ப நடந்ததுலாம்,ஞாபகம் இருக்கா..”

“அத எப்படி மறக்க முடியும்”

“சரிடா,நான் போட்ட கண்டிஷன்லா ஞாபகமிருக்கா..”

“ம்ம்.,அத மறக்க முடியுமா”

வங்ககூட வாங்க நாமும் flashbackக்கு போகலாம்.மீராவை முதல் முறை விஷ்வாப் பார்த்தது கோவிலில் வைத்துதான்.பெண்ணைப் பிடித்து இருந்தால் மேற்படி பேசலாம் என்பது அவர்களது பெற்றோர்களின் விருப்பம். மீராவைப் பார்த்ததும் விஷ்வாவிற்கு பிடித்துவிட்டது.அவன் மீராவிடம் கேட்டதற்கு அவள் கூறியப் பதில் நான் சொல்லும் கண்டிஷன்களை ஒத்துக்கொண்டால்

மேற்படி பேசுவோம் என்றாள்.

”விஷ்வா, எங்க அப்பாக்கு நாங்க ரெண்டுபேரும் தான் உலகம்.நாங்க ரெண்டுபேரும் பொண்ணு தான். அதனால் எனக்கு வரப்போர கணவர் எங்க அப்பாவுக்கு ஒரு நல்லா மகனோட இடத்தில் இருந்தும், என்னோட தங்கச்சிக்கு ஒரு அண்ணாவோட இடத்தில் இருந்து எல்லா கடமைகளையும் செய்யனும். நான் சம்பாதிக்கிற பணத்த அவங்களுக்கு கொடுத்துடா மட்டும் போதாது,அத உங்க மனசும் ஏத்துக்குனும்,இது நம்ப வாழ்க சம்பந்தப்பட்டது.இப்ப நீங்க சரின்னு சொல்லிட்டு நாளைக்கு அது உங்களுக்கு தப்பு பண்ணிட்டதா தோனக்கூடாது.அப்ப நமக்குள்ள இத பத்தின பிரச்சனை வந்த நமக்கு தீர்வுக் கிடைக்காது.அதான்...”

இதுதான் மீரா சொன்னா கண்டிஷன். விஷ்வா மாலை தனது முடிவை சொல்லுறதா சொல்லிட்டு வந்துடான்.பிறகு தன்னோட பெற்றோர்கிட்ட பேசிட்டு,தன்னோட சம்மதத்த சொன்னான்.

அப்புறம் என்ன டூம்டூம் தான்....

ப்ப அதுக்கு என்னடா..”

“ நீங்க அத சொன்னத மட்டும் இல்லாமல் அதுபடியும் நடக்குறிங்க.ஆனால்,நான்..”

“ ஓ...,இதுதான் என்னோட பொண்டாட்டி கோவத்துக்கு காரணம்..”

“ம்....சாரி,நா..”

“ஹேய்..,நீ சாரிலா சொல்லாத,நீ இப்ப எதுக்கு சாரி சொல்லுற என்மேல நீ நம்பிக்க வைக்கலனுதானா”

“ம்..”

“யாரடி சொன்னா நீ என் மேல நம்பிக்க வைக்கலனு, நம்பிக்க இல்லாமல்தான் உன்னோட சம்பளத்த அப்படியே தந்திய. நான் எப்படியும்,உங்க வீட்டுக்கு தருவேன்னு தான ”

“நான் ரொம்ப லக்கி,விஷ்வா”

“இல்ல நான் தாண்டி,ஏன் தெரியுமா எவ்வளவு சண்டைப் போட்டாலும்,என்னை அடிக்காம,இருக்கிய.. நான் கூட கோவைசரளா ரேஞ்சுக்கு அடிபியோன்னு கல்யாணத்துக்கு முன்னாடி நினைச்சேன்.ம்....”

“டேய்...உன்ன...” அப்படி என்று கூறிக் கொண்டே அவனை அடிக்க துரத்தினாள் மீரா.

“ஏய்..அடிக்காதடி..”என்று கூறிக் கொண்டே அவளை இழுத்து தன்னுள் புதைத்தான் விஷ்வா.

தன் கணவன் தன்னை மட்டும் தன் குடும்பமாக நினைக்காமல் தன் குடும்பத்தையும் அவன் தன் குடும்பமாக நினைக்கிறான் என்ற நினைப்பிலே அவனுள் புதைந்தாள் அவள்.

“என் விரல் இடுகுள்ள உன் விரல் கிடக்கணும்

நசுங்குற அளவுக்கு இறுக்கி நா புடிக்கணும்

நான் கண்ண தொரக்கையில் உன் முகம் தெரியணும்

உசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும்

கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி

கடல் உள்ள போறவன் நான் இல்லடி

கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி

கர தாண்டும் வரை நான் இருப்பேனடி”

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.