என்ன பர்ஸ்ட் செமஸ்டர்லயே அரியரா??மாமாட்ட செத்த போ..
அடச்சே அதில்லடா..என் சீனியர் ஒருத்தன் கொஞ்ச நாளா பாலோ பண்றான்டா..அவன் ப்ரெண்ட்ஸ்லா என்ன பாத்தாலே கிண்டல் பண்றாங்க ரொம்ப ஆக்வர்ட்டாஇருக்கு..நாளைக்கு நீ என்கூட காலேஜ்க்கு வாயேன்..
அவனுக்கு என்னடிஇவ்ளோ மட்டமான டேஸ்ட்..ஒரு வேளை கண்பார்வை ப்ரச்சனையா இருக்குமோ எதுக்கும் நல்ல டாக்டரா பாக்க சொல்லு என்று சிரிக்க..
உன்கிட்ட வந்து சொன்னேன் பாரு என்ன எதை வச்சு அடிச்சாலும் தப்பு இல்ல..என்கூட பேசாத போ..
இது 17 வயதான மஹாவும் கௌதமும்..என்னதான் மஹாவை வெறுப்பேத்தினாலும் மறுநாள் அவளோடு சென்று ப்ரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்க தவறவில்லை அவன்..
இவ்வாறாக இந்த அழகிய நட்பு தொடர கௌதம் இன்ஜினியரிங் முடித்து வேலைக்காக சென்னை செல்ல மஹா மேற்படிப்புக்காக மதுரைக்கு செல்ல நேர்ந்தது..அந்த பிரிவே அவர்களின் நட்பின் நெருக்கத்தை அதிகரித்தது..கௌதமிற்கு விடுமுறை இருக்கும் போது மஹாவால் வர முடியாமல் போனது..போனிலேயே இருவருவரும் பேசிக் கொள்ள ஒன்றரை வருடம் ஓடி போனது..
அன்று தீபாவளிக்காக இருவருமே வீட்டிற்கு வந்திருந்தனர்..பண்டிகையை விட முக்கியமாய் தங்கள் ஒன்றரை வருட கதையை தான் பேசி தீர்த்தனர்..தன் ஆபீஸ் கலாட்டாக்களை அவனும் தன் கல்லூரியை பற்றி அவளும் பேசித் தீர்த்தனர்..
ஆனா ஒன்னு கௌதம் எவ்ளோ ஜாலியா இருந்தாலும் எனக்கு க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்நு யாருமே இல்லடா..உன்ட்ட அட்லீஸ்ட் போன்லயாவது பேச முடிஞ்து இல்ல எனக்கு பைத்தியமே பிடிச்சுருக்கும்..
ஆமா இப்போ மட்டும் நீ ரொம்ப தெளிவா இருக்குறமாறி சொல்ற..
யாரு நா லூசா நீ தான்டா லூசு..
அது கரெக்ட் தான் லூசோட ப்ரெண்ட் நா மட்டும் எப்படி இருப்பேன் சரிமொக்க போட்றத நிறுத்து நா உன்ட்ட ஒண்ணு கேக்கனும் மஹா..
என்ன சொல்லு..
பி.ஜி இன்னும் ஆறு மாசத்துல முடிக்க போற..அடுத்து என்ன ப்ளான்.
டீச்சிங்ல இன்ட்ரெஸ்ட் இருக்குடா..ஸ்கூல் ஆர் காலேஜ் எங்கேயாவது ட்ரை பண்ணலாம்நு இருக்கேன்..
ம்ம்ம் குட் சரி அப்பறம்..
அப்பறம் என்ன கல்யாணம் பண்ணி செட்டில் ஆக வேண்டியதுதான்..ஆமா இப்போ ஏன் இதெல்லாம் கேக்குற..
ம்ம் ஒண்ணுமில்ல சும்மாதான்..
கௌதம் நா சொல்லவா??கல்யாணம் ஆயிடுச்சுனா இதுமாறிலா நம்மளால பேசிக்க முடியாதுனுதான கவலபடுற..
ஆமாடீ நீ வெளில சொல்லிட்ட என்னால சொல்ல முடில இந்த ஒன்றரை வருஷம் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேண்டீ..எனக்கும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்நுலா யாரும் இல்ல உன் இடத்துல யாரையும் வச்சு பாக்க முடில..இதெல்லாம் கேக்குறதுக்கு சைல்டிஷ்ஷா இருக்கலாம் பட் நிஜமா இதாண்டி உண்மை..இதுல கல்யாணம் பண்ணிட்டு அவங்க அவங்க லைவ்நு போய்ட்டா யோசிச்சு பாக்கவே முடில மஹா..என சோகமாய் எங்கோ வெறித்தபடி கூற,
பார்ராரா எப்போ பாத்தாலும் என்ன வாரிட்டேயிருப்பநு பாத்தா இந்த கல்லுக்குள்ளும் ஒரு ஈரம் இருந்துருக்கு பாரேன்..அவன் அவளை முறைக்க,
சரி சரி முறைக்காத ஆனா எனக்கு இதபத்திலா கவலையேயில்ல தெரியுமா..ஏன்னா நா என் க்ளோஸ் அண்ட் பெஸ்ட் ப்ரெண்ட்ட தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்..என்று கூறி புருவத்தை மேலும் கீழுமாய் அசைத்து சிரித்தாள்..
மஹா என அதிர்ச்சியாய் ஒரு பார்வை பார்த்தவனை சட்டை செய்யாமல்..ஆமா கௌதம் பேசாம நீயே என்ன கல்யாணம் பண்ணிக்கோ..உன்னை விட ஒருரு நல்ல அடிமை எனக்கு கிடைக்குமா சொல்லு??
மஹா என்ன பேச்சு இது..??எதெதுல விளையாடுறதுநு இல்ல..எங்க வீட்லயோ இல்ல உங்க அம்மாப்பாவோ இத கேட்டா எவ்ளோ வருத்தப்படுவாங்க..நம்மள நம்பி பழகவிட்டதுக்கு நாம குடுக்குற மரியாதை இதானா??
டேய் டேய் இப்போ என்ன சொல்லிட்டேன்னு இவ்ளோ எமோஷனல் ஆகுற??அவ்ளோ சீன்லா இங்கயில்ல..இந்த ஐடியாவ குடுத்ததே அவங்கதான்..
வாட்??
டேய் இருடா நீ வேற எல்லாத்துக்கும் ஷாக் ஆகிட்டு..நீ வேலைக்காக சென்னை போனும்னு சொன்னப்போ நா ரொம்ப அப்செட்ல இருந்தேன்ல அப்போ அத்தைகிட்ட ஜென்ரலா பொலம்பிட்டு இருந்தேன்..நீயில்லாம போர் அடிக்கும் அது இதுநு..அப்போ அத்தையே தான் என்கிட்ட கேட்டாங்க..
மஹாகுட்டி பேசாம நீ கௌதம கல்யாணம் பண்ணிக்கோயேன்..
அத்தை என்ன கிண்டலா??