(Reading time: 7 - 13 minutes)

திருமணம் முடிந்து விருந்து சாப்பிட்டு கூட்டம் கலைந்ததும் அடுத்து மாலை வரவேற்புக்கு மேக்கப் , சிகை அலங்காரம் என முடித்து , மெஜந்தா கலர் சேலையில் பர்பிள் பார்டரில் ஆங்காங்கே பெரிய பட்டர்பிளை ஜரிகை போட்ட சேலையில், அப்சரஸ் போல் வந்த சுபத்ராவை விட்டு கண்ணை திருப்ப முடியவில்லை அர்ஜூனால்.

“வாவ் ரொம்ப கம்பீரமாக இருக்கார் உன் ஹப்பி” தோழி சுஜியின் பாராட்டில் அர்ஜுனை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை சுபத்ரவால். இவனுடன் வாழ்க்கை முழுவதுமா என்ற கேள்வி அவளை அரித்து எடுத்தது.

சொந்தங்களும் , நண்பர் கூட்டமுமாக நேரம் சென்றதே தெரியவில்லை. ஒவ்வொருவரும் மேடைக்கு வந்து பரிசை கொடுத்து விட்டு போடோக்கு போஸ் கொடுத்து சென்றனர். கூட்டம் ஒரு வழியாக ஓய்ந்த போது, நண்பர் கூட்டம் மேடை ஏறியது.

“ஒரு வழியா உன்னோட ஓணான பிடிச்சுட “ என்று நண்பர் கூட்டம் கலாய்க்க ......

இவளது தோழி சுஜி என்னவென்று வினவ

கல்லூரியில் கடைசி நாள் அர்ஜுன் , சிஸ்டர பார்த்து பேச வந்த பொழுது “ பக்கத்தில் இருந்த செடிலிருந்த ஓனான் ஒன்று அவங்க துப்பட்டாவில் ஏறிட்டு இருந்தது. அதை பார்த்த நம்ம மாப்பிள்ளை ஓணான பிடிக்கறதுக்கு பதிலா அவங்க துப்பட்டாவ இழுத்து அவங்களுக்கு ஹெல்ப் செஞ்சா, சிஸ்டர் அதுக்குள்ள ஓடியே போய்ட்டாங்க.

அதை கேட்டவுடன் சுபத்ராவின் முகமே மாறி விட்டது. இத்தனை நாள் இவனை தவறாகவா நினத்திருந்தோம் என வெட்கினாள்.

மற்றொரு நண்பனோ “ அர்ஜுன் பாண்டியன்னா சும்மாவா, பாண்டிய மன்னர் போல் படை எடுத்து காதலை வெற்றி கொண்டான் இல்லையா”

இதனை கேட்டு அனைவரும் கரகோஷம் எழுப்பினர்.

முதலிரவு அறை,

லைட் பிங்க் நிற மைசூர் சில்க் சேலையில் அழகு தேவதையாய் வந்த சுபத்ராவை கண்டு சொக்கித்தான் போனனான் நம்ம ஹீரோ.......

“ சுபி , உன் கிட்ட நெறைய பேசணும். உன்னை முதல் நாள் பார்த்ததில் இருந்தே நீ தான் எனக்குன்னு தோணிடுச்சு , ஆனா முதல் நாளே நீ அப்செட் ஆகிற மாதிரி ஆயிடுச்சு. 

சாரிடா , அதுக்கு அப்புறம் நிறைய முறை அதே போல்.... அதனால தான் கடைசி நாள் உன் கிட்ட என் காதலை சொல்லனும்னு  வந்து, உன் துப்பட்டா மேல் ஓணான் ஏறுவதை பார்த்து, உனக்கு ஒன்னும் ஆகிட கூடாதேன்னு ரியாக்ட் செய்து அதுவும் சொதப்பிடுச்சு.

சோ இப்ப சொல்றேன்  “சுபி ஐ லவ் யூ டா”

நானும் உங்க கிட்ட சாரி கேட்கணும் அஜ்ஜூ.

“ஏன்டா?

முதல் நாள் உங்க பிரின்ட்ஸ் சொன்னதுக்கு நீங்க என்னை காப்பத்த  தான் செஞ்ஜிங்க  , ஆனாலும் உங்க பேரால தான் என்னை கிண்டல் பண்றாங்கன்னு உங்க மேல , கோபம் வந்துச்சு.

ஆனா அதுக்கப்புறம் உங்கள பார்க்கும் போது ரொம்ப பிடிக்கும். அப்பாவுக்கு பயந்து தான் உங்களை தவிர்க்க வேண்டியதாக போச்சு.

கடைசி நாள் நான் விரும்பற நீங்க அப்படி பண்ணவுடன் எனக்கு மனசே தாங்கல. கொஞ்சம் நிதானமா என்னன்னு கேட்டிருக்கலாம். இன்னைக்கு உங்க நண்பர் சொன்னவுடன் தான் எனக்கு எல்லாம் தெரிஞ்சுது.

“சாரி அஜ்ஜூ ......

“ ஹே..... இது சாரி சொல்ற நேரம் இல்லடா , ஐ லவ் யூ டூ “  சொல்ற நேரம். 

அதை கேட்டு சுபத்ராவின் முகம் அந்தி வானமென சிவந்தது .....

This is entry #40 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை -கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - பூஜா பாண்டியன்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.