தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 06 - கண்ணம்மா
மதிய உணவு முடிந்து ஈஷ்வர் எழும்பவும் அவன் தந்தை உள்ளே வரவும் சரியாக இருந்தது.
பா என்று அவன் அவர் அருகில் செல்லும் முன் அவரைக் கடந்து வந்த ஒருவன் பெளவ்வியை நெருங்கி அவள் தலையில் ஒரு செல்ல கொட்டு வை்தான். அவன் ரஞ்சித் உயர் காவல் அதிகாரி, அவனைப் பார்த்து பயந்து நடுங்கும் பெரும்புள்ளியின் எண்ணிக்கை அதிகம். சற்றும் அலட்டல் இல்லாமல், தோழிக்காக கமலேஷை மிகவும் பாதுகாப்பாக பார்த்து... இதோ வீட்டிலேயும் சேர்த்தானே.
ஈஷ்வர்ரும் இவர்களைத்தான் பார்த்தபடி நின்றான். அவன் பௌவ்வியின் தட்டைப் பிடுங்கி அவள் சாப்பிட்டுக் கொண்டு இருந்த தட்டில் இருந்த அவள் சாப்பிடாமல் வைத்திருந்த சிக்கன் 65 யை வாயில் போட்டபடி, உணக்குதான் 65 பிடிக்காதே அபரம் ஏன் பௌவ் என்று அவள் தட்டைக் காண்பிக்க, அவர் ஆசையா வச்சாரு ரஞ்சு என்று கூறியவள். எப்படி மாமா இருக்கீங்க உங்கள் பிரண்டு ஓக தானே என்று கமலேஷை விசாரித்தாள்.
எல்லாம் ஓகே ஆயிடுச்சிடா குட்டிமா என்று அவர் அவள் அருகில் வந்து பாசமாக தலையைக் கோதியபடி நின்றார். சாப்டிங்கலா? என்று அவள் கேட்க ஆசிடா என்று அவர் கூரிவிட்டே., நீ எப்படி இருக்கப்பா ? இனி இங்க இருக்க முடியும் தானேபா? என்று தந்தை மகனிடம் சற்று தல்லி நின்றே விசாரிக்க. மாமா இவர் என்ன எப்போது பார்த்தாலும் திடிக்டே இருக்காரு என்று குழந்தையாய் தன் சகோதரிமகள் கொஞ்ச.
டேய் படவா என் குட்டிமாகூடவா சண்டைப் போட்டாய் என்று அவன் முதுகில் அடிப்பதாய் பாசாங்கு செய்தார். மனம் குளிர்ந்தான் ஈஷ்வர். இருந்தும் இவள்ளிடம் நான் சண்டைப்போட்டேனா இல்லை அவள் என்னை ஆட்டிப் படைக்கின்றாளா, இவளை என்று மனதினுள் கருகியவன்.
நான் எப்போது டி உன் கூட சண்டைப்போட்டேன் என்று அவன் கேட்க, ஏன் வந்தவுடனயே என்ன திட்டினீர்கள், காலையில் திட்னீங்க, ஏன் இப்ப சப்பிடும் முன்னாடி கூட திட்டல? என்று அவளும் வம்பு பண்ண. ஏய் அதுவே சண்டையாடி என்று அவனும் அவளுக்கு நிகராய் சண்டையிட்டான். என்ன அதை பார்ப்பவர்கள் அங்கு 5வயதிற்கு குறைவான குழந்தைகள் சண்டையிடுகின்றார் போல் ரசிக்கும் படியான சண்டையும், முகச் சுருக்கமும், குழந்தையின் செயல்களாகவே பட்டது.
ரஞ்சிதான் நடப்பதை நம்ப முடியாமல் முழித்து முழித்து பார்த்துக் கொண்டிருந்தான். (பௌசியவிர்க்கு தன்னை யாரும் டி போட்டு அழைப்பது எப்போதும் பிடிக்காத ஒன்று. நண்பர்கள் கூட அதில் விதி விலக்கு அல்ல. "பௌவியை ஒருவரிடம் இருந்து அகற்ற அந்த ஒரு டி.போதும்" எப்படி மாரினால் என் தோழி) ஈஷ்வரை ஒருமுறை நன்றாகப் பார்த்த ரஞ்சித் எதுவமே நடக்காததாய் காட்டிக் கொண்டு அவன் சாப்பிடும் வேலையைதுடர்ந்தான். கனீமாவிர்கும் இப்போது அதேபொண்ற ஒரு எண்ணம் தான்.
(சிறு வயதில் இருந்தே ஈஷ்வர்க்கு குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் பழக்கம் எல்லாம் இல்லை. தன் இருசகோதரர்கள், மற்றும் அவன் நெருங்கிய நண்பர்கள் 4 பேர் தவிர. பெண்களிடம் பேட்சை வளர்க்கும் ஆள் இல்லை என்று சொலவதர்கில்லை. சொந்தத்திலோ அல்லது தொழில் முறையிலோ கூட எந்த பெண்ணிடமும் பேசாதவன். தொழில் சமந்தமாக பேசும் போது பெண் ஆண் என்ற பாகுபாடு அவனிடம் இருந்தது இல்லை. அழகன் தான் ஆனால் முசுடு. பக்குவமாய் எதையும் சொல்லவோ செய்யவோ தெரியாதவன். முரடன். அவன் வெலித் தோற்றத்தையும் அவன் திறமையை பார்த்து பின் வரும் பல பெண்கள் அவன் பார்வையாலேயே தல்லி நிருத்திவிடுவான். டி என்று அவன் வாயில் வருவது 8ஆவது அதிசயம் தான்.)
ஆரம்பத்தில் இருந்து எல்லாத்தையும் கவனித்து இருந்த கனீமா கமலேஷ் சார்ரைப்பார்ததும் அனைத்தையும் கிடப்பில் போட்டு விட்டு அவர்ரை நெருங்கி நின்று கொண்டார். கமல் சார்க்கும் இப்போது அவர் மொழி மட்டுமே தெரிகிறது போல. மொழி என்னடா எப்படி இருக்க என்று அவர் தன் மனைவியை அணைக்க அது வரை அமைதியாக இருந்த பௌவ்வி, ஈஷ்வர், சஞ்சு ஊஊஃப்பூ உஃப்ப்பு என்று இரும்ப கணி ரஞ்சித்தையும் ஈஷ்வரையும் முதுகில் ஒன்று வைக்க, பௌவ்வீ காதை கமலேஷ் பிடிக்கும் முன் நழுவி ஓடி விட்டாள் பௌவ்வி.
என்ன மாம்ஸ சின்னப் பிள்ளைகள் இருக்காங்லேனு கொஞ்சமாச்சும்இருக்கா? இப்படியா பப்லிக்கா ரொமேன்ஸ் பன்வீங்க என்று அவள் அவரைவிட்டு தல்லி நின்றபடி குறும்பு சிரிப்புடன் கேட்க. கமலேஷ் பௌவ்வீயை துரத்திக்கொண்டு ஓடினார். அடி படவா இரு உன்னை... என்றபடி.
இதைக் கண்ட கனியும் சஞ்சுவும் சத்தமாகச் சிரிக்க, ஈஷ்வர் உதட்டிலும் குருநகை இருந்தது. சரியான வாயாடி டி நீ என்று மனதினுள் கொஞ்சிக் கொண்டான் அவனுக்கே தெரியாமல். ஒருவழியாக பொவ்வியுடன் ஓடிப் பிடித்து விளையாடியவர் அவளைப் பிடித்து விட, மாம்ஸ உங்கள் குட்டிமா பாவம் தானே விட்டுடுங்கலேன் , என் செல்ல மாம்ஸ்ல என்று அவரைக் கொஞ்ச அவள் தலையை ஆட்டிவிட்டு, புன்னகைத்த மாமனை அனைத்துக் கொண்டாள். மாத்திரைலாம் ஒழுங்கா தானே சாப்பிடுரீங்க என்று அவள் மிரட்டல் தோனீயில் கேட்க, அம்மாடி காணொளி காலில் நான் மாத்திரைப்போட்டு விழுங்கினதைப் பார்த்தாய் தானே அபரம் என்டா என்று அவரும் தாயின் முன் பிள்ளையாய் பதில் சொன்னார்.
தந்தையை ஏதோ அமேசான் காட்டில் இருந்து வந்த புது மிருகமோ என்ற பார்வையை தாங்கி