(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 05 - கண்ணம்மா

Un manathil iruppathu naanum en kathalum mattume

மூஞ்சைப் பாறு மூஞ்சை இவளலாம் ஒரு ஆளு இவளுக்காக நான் ஏங்கரதா...

ச்சீசீீீீசீ.... என்று ஈஷ்வர் மனதினுல்லே நினைக்க அவன் மனமோ அவனுக்காக பேசுவதாய் பாசாங்கு செய்து தன்னவளின் பக்கம் பக்காவாக நின்னது

நான் அவளை நினைக்ரஅலவுக்கெல்லாம் அவட்ட என்னடா இறுக்கு - மனம்

ம்ம்ம்ம் அதானே ... -- ஈஷ்வர்

அந்த ரெளண்டு பேஸ் கட்டும் அதுல இருக்கக் குழந்தை தனமும் அவப்பக்கம் பார்த்தா இன்னோர் வாட்டி பாக்க வைக்கிறது தான் ...- - மனம்

அதுக்கு....

சரி அவ கண்ணம் சும்மா மல்கோவா மாம்பழம் மாதிரி வழு வழனு இறுக்கு கொஞ்சமா கடிச்சா தான் என்னனு தோன்றும் தான்...- மனம்

ம்ம்ம் ஆமாம்ல சரி அதுக்கு....

ம்ம்ம்ம்ம் அந்த உதடு சும்மா ஆரஞ்சு சுளை மாதிரி சாப்டா... கொஞ்சம் கஷ்டம் தான் கண்னு வலிக்க வலிக்க வந்த அணைக்கே வெரிச்சேன்னே...- - மனம்

அதேதான்.... ம்ம்ம்ம் நாம்ப என்ன செய்யரது.. ஈஷ்வர்

அவ ஒண்ணும் பேரழகிலாம் இல்ல--- மனம்

ஆமாம் ஆமாம்.. கண்டிப்பா இல்ல

அது சரி என்று அவன் மனம் அவனை ஓட்ட ...

என்ன அந்த கண்னு .... அது யப்பாாா

மனிஷன தூக்கி ஒரு சொழட்டு செழட்டுது

நிறையவே படுத்திடும், சும்மா இருக்கரவன கூட உசுப்பி விட்ரும் தான்

இவ கிட்டக் கொஞ்சம் இல்ல நிறையவே பார்த்து தான் இருக்கனும்.

இப்படி அவன் மனம் அவனுக்காகப் பேசுவதைப்போல் ஏமாற்றி அவளைப் புகழ ஈஷ்வரோ அதற்கு ஸ்ருதி சுத்தமாக சிங்சேக் அடித்தான்.

போனில் அவள்தான் யாருடனோ இப்படி கூத்தடிக்றாள்னா, இவங்களுக்குலாம் என்ன ஆச்சி..? அம்மாவும் அப்பாவும் சேர்ந்து நம்மல ஓட்ராங்களே... யார் யா இவன் போன்லயே இப்படி, இன்னும் நேரில் வந்தால்?

சுத்தம் என்று அவன் மனம் அவனை வெளிப்படையாக கலாய்த்தது.

வீட்டில் ஒருவழியாக அமைதி திரும்பியது, இவளும் போனை வைத்துவிட்டாள் என்றவன் நினைக்க. அவளோ மதியம் சமையலுக்கு மெனு தயார் செய்தாள். ராதைவையும் இன்னும் சில வேலையாள்களையும் ஏவ்வியபடி கனிமாவிர்கு மாத்திரைக் கொடுத்தாள். இருவரும் ஏதேதோ பேசியபடி. Sorry, வம்பலந்தபடி அமர்ந்திருக்க இதை அனைத்தையும் கண்டும் காணாதவன் போல் சிட்டௌட்டில் இவர்கள் அமர்த்திருக்கும் இடம் தெரிவது போல் இருந்த ஒரு சாய் நாற்காலியில் அமர்ந்திருந்தான்.

உடல்நிலை சரியில்லாதவர் என்று கனிமாவைப் பார்ப்பவர்கள் சொல்ல முடியாது என்பதைப்போல் இருந்தார். பௌவ்விமா... எனக்கு பிரியாணி செய்து தரியா என்று அவர் கேட்க.

அத்தம்மா செய்து தரேன் ஆனால் மட்டன் தான் சிக்கின் இல்ல பரவாயில்லயா என்று சிறுபாள்ளையிடம் கேட்பதைப்போல் கேட்க, வாங்கிட்டு வரலாமேடா ப்லீஸ் என்று அவரும் குழந்தையாகவே பதில் தந்தார். நோ... அத்தமா not today. Try to understand மா, உங்க்கு சிக்கின் வேனாம் இன்றைக்கு மட்டும் 3 நாள் அப்பரம் எப்போது கேட்டாலும் செய்து தருவேன்.

ம்ம்ம்ம் சரி என்று முகம் வாடியபடி தலை அசைத்தார்.

இவள்ளுக்கு என்னவாம் அம்மா ஆசையா இப்படி எதயாவ்து சாப்பிடக் கேட்டு நான் பார்த்ததே இல்ல, இவ செய்து தரலனால் போட்டும் நான் எங்கம்மா கேட்டதை வாங்கித் தருவேன் என்று, அந்த ஊரில் சிறந்த நட்சத்திர ஓட்டல் ஒன்றின் நம்பரை ஆன்லைன்னில் தேடி, நல்ல ரெவ்யூக்களை பார்த்து, அதன் பேரில் அந்த ஓட்டலிலே சிக்கின் பிரியாணி , 65, மஞ்சூரியன், சாப்ஸ், பட்டர் சிக்கின் என்று எல்லாமே சிக்கினாக ஆர்டர் செய்தான்.

அன்னை ஓய்வெடுக்கச் சென்றதையும் இவள் சமையலை ஆரம்பித்ததையும் கண்டவன் மனதினுள், எங்கம்மாவ பார்த்துக்க வந்தவள் தானே? அவங்கள் இஷ்டத்துக்கு சமையல் செய்யாமல் இவப்பாட்டுக்கு அவளுக்கு பிடித்ததை சமைக்ரா என்று மனதினுள் கருவினான்.

சமையலை முடித்தவள் குலித்து வர அறைக்குச் செல்ல வாசல் மணியை யாரோ அழுத்தச் சத்தம் வீட்டைநிரைத்தது. ஈஷ்வர் சார்க்கு பார்சல் என்று வந்தவன் கூர சங்கரன் உள்ளே போன் மூலம் ஆவன்னுக்கு தெரியப் படுத்தினான். அவர்கள் புட் கொண்டு வந்துருப்பாங்க பில்லை வாங்கி அமொண்ட் எவ்லோனு பார் சங்கர் நான் பணம் கொண்டு வரேன். ஈஷ்வர் பேனை வைத்துவிட்டு பர்ஸ் கொண்டு வர அவன் அறைக்குச் செல்ல அங்கோ மாம்பழ நிற மேல் சட்டையும் அதில் கத்தரிப்பு பாட்டர் ... முழு நீல கத்திரிப்பூ நிறப் பாவாடை அணிந்து தலையை உலர்த்த குனிந்து ஒதுரியபடி நின்றிருந்தாள் வீட்டிற்கு வந்த புதுப் பெண்.

 உரைந்து தான் போனான் அவள் நிமிர்ந்து அவனைக்கன்ட நொடியில். சரியான ஆள் மயக்கி இவ என்று அப்போதும் அவன் மனது அவளைக் கொஞ்ச மரக்கவில்லை. அவன் அறைக்குப் பக்கத்து அறை வழியாகவும் செல்லலாம் என்று அவன் வந்து விட்டான். ஆனால் இவள் இங்கு தான் தங்கி இருக்கிறாள் என்று யார் சொன்னதாம் இவனிடம். 

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.