தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 07 - கண்ணம்மா
கமலேஷ் சார்ரும் கனிமாவும் ரஞ்சித் காலில் விழுவதைப் பார்த்து சிரிக்க, ஈஷ்வரோ இவன் என்ன லூசா என்று அவனைக் கிட்ட தட்ட வெறித்து பார்க்க, லக்ஸை பார்த்து அவள் அருகில் வரக் கையசைத்தாள். கன நேரத்தில் யாருமே கவனிக்காத நொடியில், அவனைத் தாண்டி வந்த லக்ஸின் காலை கில்லி விட்டு.
பேயீகலா என்னையும் என் சந்தியையுமா பிரிக்க பார்தீங்க என்று அவன் பையில் இருந்த மர டப்பாவைத் திறந்தவன் லக்ஸை ஒரு கையில் பிடித்தபடி, அதில் இருந்ததை லக்ஸ்மீது போட அவள் அலறியதை விட 10மடங்கு அதிகமாய் அலறியபடி பொளவ்வி ஈஷ்வரை தாவி அனைத்துக் கொண்டாள்... இந்த நேரத்தில் இதை நான் சொல்லியே ஆக வேண்டும் ஈஷ்வர்கும் பௌவ்விக்கும் குறைந்தது 4 யானை நிருத்தி வைக்கும் அளவிற்கு இடம் இருந்தது.
ஈஷ்வர் பௌவ்வியை மிருதுவாக அனைத்து கொண்டு ஒண்ணும் இல்ல டா ஈஷுமா ஒண்ணும் இல்லடா குட்டி என்று அவளை நார்மல் ஆக்கப் பாடுபட்டான். அவள் நிமிர்ந்து கூட பாராமல் ஈஷூப்பா ஈஷூப்பா என்று இன்னும் அவனுடன் ஒன்றினாள்ளே தவிர அவனைவிட்டு அசையவில்லை.
அவன் என் மேலயும் போட்டுடுவான் ஈஷூப்பா என்று அவனைப் பார்த்து இவள் பயந்த முகத்துடன் சொல்ல ருத்ரேஷ்வரணாக மாறிவிட்டான் ஒரு நொடி, அடுத்த நொடியே அவளின் பிடி இறுக அவளை இன்னும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, டேய் ரஞ்சீ அவள் தான் பயப்டுவாள்னு தெரியும்ல ஏன்டா? என்று மிகவும் தெரிந்தவன் நண்பனைப் போல் பேசினான்.
ரஞ்சுூ என்ன வைத்திருந்தார்? என்ற கேள்வி உங்களை குடைகிறதா..? வேறு ஒன்றும் அல்ல அவன் மர டப்பாவில் அவன் அசிஸ்டன்டை விட்டுப் பிடித்து வந்த கரப்பான் பூச்சியைத் தான் வைத்திருந்தான். இவனைப்பார்த்து கான்ஸ்டபுல் அருள் விசித்திர பார்வை பார்த்ததையெல்லாம் கண்டுக்காமல் இவர்ளுக்காவே கிட்டத் தட்ட 180 கிலோமீட்டர் கொண்டு வந்தானே.
சிறு வயதில் இருந்தே பௌவ்விக்கு பூச்சிகள் என்றால் பயம். பல்லி கரப்பான் என்றால் எஃஸ்ட்ரா பயம். இதை அரிந்து தான் பௌவ்வி மீது போடாமல் அந்த அடங்கா பிடாரி, கொல்லி வாய் பிசாசு, ராகாலீ லக்ஸ் மீது போட்டான். லக்ஸ் அவள் மீது வழிந்த பொருளைப் பார்த்தவுடன் அலறினாலே தவிரச் சற்று நேரத்திர்க் கெல்லாம் அவள் மேல் இருந்ததை அனைத்தையும் தட்டி விட்டபடி அவனை தொரத்தி துவைக்க ரெடியானாள்.
லக்ஸ் மீது பட்டதை பார்த்தவள் தாயிடம் பயந்து தஞ்சம் அடையும் சேயாய் அவனின் அரவணைப்பில் அவன் இரு கைகளின் நடுவில் பாதுகாப்பாய் இருந்தபடி, என் மேல் போட்டுடுவான் என்று கோல் வேறு சொன்னாள். அதர்க்கு மேல் அவன், என்னவோ எரிமலை குழம்பை இரண்டு கரண்டி மொண்டு ஊற்றியதைப் போல் ரியாக்ஷன் வேறு.
சஞ்சையைத் திட்ட வேறுசெய்தானே. ஈஷீமா என்றதுமே மற்ற அனைத்தையுமே மறந்து ஈஷ்வரை கவனிக்க ஆரம்பித்து விட்டான் ரஞ்சித்.. பௌவ்வியும் உணர்ச்சி வேகத்தில் அவனிடம் ஒன்ற லக்ஸ்சும் ரஞ்சித்தும் சுதாரித்தனர். பௌவியை விலக்க நினைத்து அவர்களைப் பார்க்க இருவரும் யேதோ தனி உலகில் சஞ்சரித்தார் போல், அவளை இவன் கட்டி தழுவி ஆறுதல் படுத்த அவளோ இன்னும் அவனுடன் ஒன்றினாள். சரிதான் என்று நிமிர்ந்தால் கமலேஷ்ஷும் கனிமாவும் இவர்களைத் தான் கேள்வியாய் பார்த்தனர். ஏதோ சமலிக்லாம் என்று சஞ்சை வாயை திறக்க சரியாக அப்போது தான் ஈஷ்வரிடம் ரஞ்சூவை மாட்டி வைத்தாள். சட் டென்று ஏன்டா ரஞ்சி நீ வேறு என்று அவனைக் கேட்டுவிட்டான். பெரியவர்களின் பார்வை எதையோ ஆராய்வதைப்போல் இவர்கள் மீது படிந்தது.
லக்ஸ் ஏதோ ஜாடையில் அழைக்க நினைத்தாலும் என்ன என்று அழைப்பாள் ஈஷ்வரின் தாய் தகப்பனின் முன். அத்தர்க்குள்ளாகவே சுய நினைவுக்கு வந்தவள் ஈஷ்வரை விட்டு தல்லி நின்றாள். அவனுக்கு அதிர்ச்சி+ ஆச்சரியம் நான்னா ? என்னையா? எப்படி அழைத்தாள் என்னை ? ஈஷூபா வா? ... கேட்கும் போதே என்ன ஆனந்தம். யார் இவள்? இவளை நான் என்னவோ அழைத்தேனே? ஈஷூமா என்று இவன் வாயில் தானே வந்தது. அது மட்டுமா? அந்தக் குரங்கை நண்பனாய் பேசினேனே... எதுவும் புரியாமல் குழம்பினான். ஆனால் போலீசு மூலை எழுந்து கொண்டது. அப்போது சிங்ரிஷ்க்கு அனைத்தும் நினைவுக்கு வர சில காளங்களே பொறுத்தால் போதூம்மா? என் உயிர்த் தோழியின் வாழ்கையில் வசந்தம் விரைவில்.
எல்லையற்ற மகிழ்ச்சியில் நண்பர்கள். பௌவ்வீ அந்த இடத்தை விட்டு ஒரே ஓட்டமாய் ஓடி விட்டாள். அவள் முகத்தின் சூடு அவளை வேக வைத்து விடுமோ என்று அவளே பயம் கொள்ளும் அளவிற்கு இருந்தது. அவர் என்னை ஈஷூமா என்று அழைத்தார் தானே? என்னை தெரிகிறதா அவருக்கு... ஆம் அவர் மனதிற்கு தெரிகிறது. அவரே நினைவுக்குக் கொண்டு வரட்டும் என்று அதை அத்துடன் நினைப்பதை நிருத்திவிட்டு, இந்த தருணத்தில் அவன்னுடன் இருக்கிறேன், அவன் என்னவன் என் மனதிர்க்கினியவன்.
ரஞ்சூவும் லக்ஸ்ஸும் அவள் அரைக்கு வந்து அவளை அழைத்ததும் எதையும் கூரமுடியாமல் லக்ஸ்சை ஓடிப்போய் அனைத்துக் கொண்டாள், ரஞ்சூ அவர் என்னை ஈஷூமானு கூப்டார்டா பார்த்தியா என்று அவள் கேட்க, பாசமாக அவள் தலையை கோதி ஆம் என்பதாய் தலையை ஆட்டினான். யாரும் எதுவும் பேச வில்லை. சாய்ந்தரம் தாத்தாவுக்கு படைக்கவேண்டும் படச்சிட்டு கிலம்பிடலாம் லக்ஸ் என்று தோழியிடம் கூறியவள். சந்தியா நேரா ஹோடல்கு