வந்துடுவாள் கார் அனுப்ரேன்னு சொல்லிட்டேன், போய் 5 மணிக்கெல்லாம் கூப்ட்டுட்டு 8 மணிக்குள்ள வந்துடு என்று சொல்லி சஞ்சுவைப் பார்த்து கண்ணடித்து விட்டு , உங்கள் ஆள் டேரெக்டா இங்க வந்துடுவார் நீ அவரோடு வந்து சேர் டி என்று லக்ஸை தலையில் தட்டி விட்டுச் சென்று விட்டாள். தன் தாயை பெற்றவர்களின் நினைவு நாளில் செய்யும் பூஜைகளின் ஏர்பாடை பார்ப்பதற்கு.
(லக்ஸ்சும் பௌவ்வியும் பள்ளி ஆரம்பங்களில் இருந்து தோழிகள். இருவர் பெற்றோர்களும் நண்பர்கள், வீடும் அருகருகே. லக்ஸ் அவள் வீட்டில் இருந்ததை விட பெள்வ்வி வீட்டில் தான் அதிகம் இருந்திருப்பாள். பள்ளியில் வால் என்ற பட்டம் பெற்ற கும்பல்களின் தலைவிகள். கல்லூரியில் சீனியரான சஞ்செய் பௌவ்விக்கு நெருக்கம் ஆனது அவள் சஞ்சையை ட்ரக் விற்றான் கல்லூரியில் என்று கூறி காவல்துறை பிடித்த அன்று. அவன் அதில் சம்பந்த பட்டவன்னாக இருக்க மாட்டான் என்று அவன் முகதைப்பார்த்து உணர்ந்தவள்,அவன் விற்றதாகக் கூரிய நேரத்தையும் அவன் பேரையும் அவன் நண்பன் ஒருவனிடம் விசாரித்து, காவல்துறை அவனை நெருங்கி நிற்பதை சற்றும் சட்டை செய்யாமல் அவனை நெருங்கினாள். யோசிக்காமல் ரஞ்சுனா இங்க என்ப் பன்ற வா வீட்டுக்கு போலாம் நேத்திலந்து உடம்பு சரி இல்லைல வா என்று அவனை அழைத்துச் செல்ல, யார்மா நீ அவனை விடு நாங்கள் அரஸ்ட் செய்யவேண்டும் என்று இன்ஸ்ப் பெக்டர் கூரியதை யேதோ காமடி கேட்டார் போல் சிரித்து விட்டு, ஏன் சார் சின்னப் பசங்கள் வைத்திருந்த சாக்லேடைப் பிடுங்கி தின்னுட்டானா? இவள் கேட்ட பாணியில் அதுவரை பயத்திலும் பதட்டதில்லும் நின்ற ரஞ்சித்துக்கே சிரிப்பு வந்து விட்டது. செய்வான் சார் என் எல்லா சாக்லைட்டையும் தின்னு தான் நேற்று பூர உடம்பு சரி இல்லாமல் படுத்துடான் என்று அவள் பாட்டிர்க்கு சீரியசாக காமடி செய்தாள்.
நேற்று இவன் கல்லூரிக்கு வரலயாமா என்று அவர் கேட்க, வந்தானே சார் ஆனால் நாங்கள் இவனுக்கு உடம்பு சரி இல்லனு சீக்கிரம் வீட்டுக்கு போய்டோமே.
காவல் அதிகாரி ஏதோ யோசிக்க..
ஏன் சார்?
இல்லமா நேற்று இவன் இந்த பையன்னுக்கு ட்ரக் விற்றதாக என்னிடம் சொன்னானே இவன் என்று இன்ஸ்பெக்டர் விசாரிக்க.
அவள் அவரை விட்டுவிட்டு, ரஞ்சூனா என்று அவன் கையை பிடித்து யார் இவன் புதுசா இருக்கிறான் உனக்குத் தெரியுமா என்று கேட்க?
இல்லமா எனக்கும் யாரென்று தெரியவில்லை என்று கூரிவிட்டான்.
இன்ஸ்பெக்ட்டறோ இவன் உன் பிரிவில் உன்னுடன் தானே படிக்கிறான் என்று கூறினான். ரஞ்சூ வாயைத் திரக்கும் முன், ஒன் மினிட் சார் ரஞ்சுனா என்ன பிறிவு எந்த வருடம் என்று அவனிடம் கேட்டீர்களா?
முதலில் ரஞ்சுனாவின் தோழர்களிடம் அவரை யாராவது பார்த்தது உண்டா.? இவன் அவர்களின் வகுப்பு தானா என்று விசாரித்தீர்களா? கேள்வி மேல கேள்வி கேட்டு இன்ஸ்பெக்டரை கலங்கடித்தாள்.
அசந்து போனான் ரஞ்சு, அவனை மாட்டி வைத்தவனும் தான். வழக்கமாக மாணவன் போல் வந்து கஞ்சா விற்று செல்பன் இன்று கடேசி பொட்டலத்தை விற்க ஆள் தேட அங்கு வந்த அதிகாரியிடம் மாட்டிக் கொண்டான். நேற்று தான் முதல் முதலாக வாங்கியத்கவும், என் வகுப்பு தோழன் அவனிடம் என்று ரஞ்சுவை கை காம்பித்து விட்டான். மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கு 8 வருடத்திற்கு பிறகு வந்த பௌவ்வி கல்லூரி ஆரம்பித்து 3 மாதம் பின் தான் கல்லூரியில் சேர்ந்தாள். இன்று தான் முதல் நாளே. இதலாம் இன்ஸ்பெக்டர்க்கு தெரியுமா என்ன?
மாட்டிக் கொண்டு முழித்தது உண்மை வெலி வர பௌவ்வியை தாக்க நெருங்கினான் அந்தக் கஞ்சா பார்ட்டி. அங்கிருந்த இன்ஸ்ப்பெக்ட்ர் ரஞ்சு அனைவரும் பதட்டம் அடயை... அசால்டாக போட்டிருந்த வெள்ளை ஜீன்பேண்டின் மீது சற்றும் கரை படாதவாறு காலைத்தூக்கி ஒரே கிக்கு தான். சுருண்டு விட்டான் அவன். காவல்துறை இன்ஸ்பெக்டர் ரஞ்சுவப் பார்த்து உங்கள் தங்கச்சி இருக்கப்போ நீங்க எந்த விஷயத்துக்கும் பயப்படவேண்டாம் என்று அவன் முதுகில் தட்டி கொடுத்தார். சாரி சார் என்று அவர் ரஞ்சூவிடம் மன்னிப்பு கேட்டு கிளம்ப, பௌவ்வி மிகவும் சாதாரணமாக ஓய்ய்ய் பி சி எஸ் க்கிலாஸ் பச்ட் ஹியேர் எங்கே இருக்கு என்று அவனைக் கேட்க, அவள் தலையிலே வலிக்காமல் கொட்டி வாளு என்று வாஞ்சையாகத் தலை கோதினான். அங்கு ஆரம்பித்தது இவர்களின் நட்பு
என்றுமே உன் காதலி கண்ணமா