(Reading time: 8 - 15 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

லைப்ரரில தேடுறதுதான் ப்ளான்.கண்மணி நீ இனி வேற டிபார்ட்மென்ட்டுங்கிறதால அடுத்த செமெஸ்டர் வேற கிளாஸ் போய்டுவ! உன்னை கண்டிப்பா மிஸ் பண்ணுவேன்டி!

கிளாஸ்ரூம் தானே வேற வேற. காலேஜ் ஒன்னுதானே. லஞ்ச் ப்ரேக்ல கண்டிப்பா டெய்லி மீட் பண்ணுவோம்!”என்றவாறே கையைக் கோர்த்துக் கொள்ள, இருவரும் கல்லூரிப் பேருந்தை நோக்கி நடந்தார்கள். கண்மணி, “இன்னிக்கு ஒரே ஒரு நாள், நான் ஜன்னலோரம் உக்காந்து வர்றேன்பா!”. ரம்யாவின் குரலில் இருந்த வேண்டுகோளை கண்மணியால் மறுக்க முடியவில்லை. சரியென்று தலையசைத்து அவளையே உக்கார விட்டாள். ரம்யாவுக்கு ஏனோ ஒரு படபடப்பு, உள்ளங்கைகள் வியர்த்தன. கண்ணிமைகள் அசைவில்லாமல் ஜன்னலின் வெளியே பார்த்துக் கொண்டு வந்தாள்,  அவள் பார்க்க நினைத்த அந்த ஒரு முகம், அந்த முகத்தைப் பார்த்ததும் அவளின் பரபரப்பு குறைந்தது. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

என்னாச்சு ரம்யா? ஏன் இப்படி படபடப்பு உனக்கு? உடம்பு எதுவும் சரியில்லையா?

ஹ்ம்ம், லேசா காய்ச்சல் வர்ற மாதிரி இருக்கு, உன் தோளில் சாஞ்சுக்குறேன். என் ஸ்டாப் வந்ததும் எழுப்பி விடு!

ஏண்டி, நீ தூங்குறதுக்குத் தான் ஜன்னல் சீட் கேட்டியா? சரி சரி நீ ரெஸ்ட் எடு. உன் ஸ்டாப் வந்ததும் எழுப்புறேன்.

கண்மணி நான் லீவ்ல என்ன பண்ணப்போறேன்னு எனக்கே தெரியல. அப்பப்போ  எனக்கு போன் பண்ணு அம்மாகிட்ட கேட்டுட்டு என்றவாறே தனது ஸ்டாப்பில் இறங்கும் போது சொல்லிவிட்டு அவளுக்கு விடைகொடுத்தாள்.

எப்படியோ பரீட்சைகள் முடிந்து விடுமுறை விட்டாச்சு என்றாலும், ரம்யாவின் மனதில்  ஏனோ பாறாங்கல் பாரம். முகத்தின் வாட்டத்தைப் பார்த்து அம்மா கேட்கவும், கேள்வித்தாள் வெளியான விவரத்தைச் சொல்லி சமாளித்தாள்.  மத்தவங்க எப்படியோ பாஸ் பண்றாங்க. நீ படிச்சு வாங்குற மார்க் போதும். நிம்மதியா இரு! என்று அம்மா அவளுக்குத் தேநீர் தயாரிக்க உள்ளே சென்றார்கள்.

கிறிஸ்துமஸ், புது வருடம், பொங்கல் வரைக்கும் செமெஸ்டர் விடுமுறையில் என்ன செய்யலாம் என்று திட்டமிட்டு வைத்திருந்தவள், எதையும் செய்யத் தோன்றாமல், தனியாக தன் அறையில் இருப்பதும், சிந்திப்பதுமாகவே பொழுதைக் கடத்தினாள்.  சரியாக சாப்பிடாத அவளைத் துருவித் துருவிக் கேள்வி கேட்க அம்மாவுக்கு சலிப்பாகி விட்டது.

“அம்மா, எனக்கு பல் வலிக்குது. அதான்மா சாப்பாடு வேணாம்னு சொல்றேன்!” என்றாள் ரம்யா. ஆனால், அன்று மாலையே, பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று விட்டார். அவளின் பற்களைச் சோதித்த மருத்துவர், பல்லில் எந்த பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை என்று சொன்னவர், அம்மாவிடம் திரும்பி,”உங்க பொண்ணு பல் எல்லாமே நல்லாத் தான்

4 comments

  • சில நேரம் இப்படி தான் படிப்புனு வரப்போ நட்பைத் தாண்டியும் பொறாமை வந்திருது! நன்றி தோழி!
  • Hahaha 😂😂 oru poi sonnadhukku ithanai punishment ah facepalm :D cool and interesting update ma'am 👏👏👏👏👏👏👏 mithru dhrogingala irukangale ivanga....question paper out anadhai close Frnd kk kuda sollama :grin: overall enjoyed reading the update ma'am 👌<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.