(Reading time: 9 - 17 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 06 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

ரும் திங்கட்கிழமை முதல் வகுப்புகள்  ப்ளாக் 5 என்னும் புதிய கட்டிடத்தில் இயங்கும். அவரவர் வகுப்பறைகளின் விவரம், தரைத்தளத்தில் உள்ள அறிவிப்புப் பலகையில் ஒட்டப்படும்” என்று இருந்ததை பிசிக்ஸ் சார் வாசிக்கவும், புதிய வகுப்பறைக்குச் செல்லும் மலர்ச்சி வகுப்பில் அனைவரிடமும் தோன்றியது. ரம்யா மட்டும் ஏதோ நினைவில் இருக்க, தேவி அவளிடம் வகுப்பறை மாற்றத்தைப் பற்றி பேசத் தொடங்கினாள். காதில் அரைகுறையாக வாங்கிக்கொண்டே உம் கொட்டியவள் புத்தகத்தைப் பார்த்தவாறே இருந்தாள்.

மாலையில் கல்லூரிப் பேருந்தில் கண்மணியும் தனது வகுப்பறை மாற்றத்தைப் பற்றிக் கூறினாள். இப்போது தோழிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் இருக்கும் வெவ்வேறு கட்டிடங்களில் இருப்பார்கள் என்பது ரம்யாவுக்கு அயர்ச்சியாகத் தோன்றியது. இதைவிட அவள் தினேஷின் வகுப்பறை எங்கே  மாறி இருக்கும் என்ற கவலை வேறு, இதுவரை அது எங்கு இருந்தது என்றும் அவளுக்குத் தெரியாது. தினமும் மதியம் கார்த்திக்கை கண்மணி பார்க்கச் செல்லும் போதே தினேஷை ரகசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் ரம்யா.

கண்மணி தற்போது கார்த்திக்கின் வகுப்பும் வேறிடம் மாறிவிட்டதையும், சற்றே முகமலர்ச்சியுடனே தொடர்ந்து, “எனக்கும் கார்த்திக்கும் இப்போ அடுத்தடுத்த பில்டிங் தான் லஞ்ச் பிரேக்கில் பார்க்கிறதுக்கு அங்கேயும் இங்கேயும் நடக்கத் தேவையில்லை அந்த மட்டிலும் எங்கள் இருவருக்கும் நல்லதாகப் போச்சு!” என்று சொன்னாள். “உனக்கு நல்லதாப்போச்சு! என் பாடு!” என்றாள். ஏன்டி?என்ற கண்மணியிடம் ஹ்ம்ம் உன்னைப் பார்க்க நான் நடந்து வரணும்ல என்றாள். சரி நானே உங்க ப்ளாக்குக்கு நடந்து வர்றேன் என்றவளிடம் தினேஷின் கிளாஸ் எந்த கட்டிடத்தில் என்று வெளிப்படையாகக் கேட்க ரம்யாவுக்குக் கூச்சம். முதலில் அவன் டிபார்ட்மென்ட் என்னவென்று தெரிந்தால் தானே, அவன் வகுப்பு எதுவென்று தேட முடியும்.

மறுவாரம் திங்கள் காலையில், பிரம்மாண்டமான புதிய கட்டிடத்தில் உள்ள தரைத்தளத்தில் நின்று கொண்டு இருந்தாள் ரம்யா. அவளின் அண்ணன் ராபின் யதேச்சையாக அங்கே வர, என்ன ராபின் இங்கே என்று கேட்டாள் ரம்யா. அவன் மிகவும் பெருமிதமாக, “இந்த புது பில்டிங்கல நாங்க தான் டாப் கிளாஸ் தெரியுமா?” என்றான்.

புரியாமல் விழித்தவளைப் பார்த்து சிரித்தவாறே, “சிவில் டிபார்ட்மென்ட் தான் மேலே டாப் புளோர்ல இருக்கு நாங்க ஐந்தாவது  மாடில இருக்கோம். அதைத் தான் சொன்னேன்!” என்றான்.

உன் கிளாஸும் இங்கேதானே? என்றவனிடம் ஆமா மூன்றாவது  மாடியில் என்றாள்.

தினமும் இத்தனை மாடிப்படி ஏறி இறங்கி நல்ல எக்ஸர்சைஸ்தான் நமக்கெல்லாம் என்றவனிடம்,  என்னோட பிரண்ட்ஸ் சில பேரு வேற பில்டிங் மாறிட்டாங்க! அதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு! உன் பிரெண்ட்ஸ்லாம் வேற பில்டிங் எதுவும் போயிட்டாங்களா? என்றாள்

4 comments

  • நன்றி தோழி! காதல் எப்பவும் கண்மூடித்தனமானது தான்! :P
  • Interesting update ma'am 👏👏👏👏 Kanmani idhuke upset ana eppadi facepalm guna Kamal sir mathiri Karthik anbodu oru kadidham parcel panupa Kanmani kk 😍😍😍 idi mazhai puyal ethu vandhalum enaku ena ndra range la irukanga ramya 😂😂inum ethanai naal indha hide n seek??? Andha unhappy news envaga irukkum?? Waiting!!<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.