தொடர்கதை - கண்ணின் மணி - 17 - ஸ்ரீலேகா D
“திவேஷ், கம்பெனியோட டீல் முடிஞ்சிருச்சா?”
எப்போதுமே கம்பெனி பற்றி பேசாத பூர்வி முதல் முறையாக அதைப் பற்றி பேசியது திவேஷிற்கு ஆச்சர்யமாக இருந்திருக்க வேண்டும். பூர்வியால் அதை புரிந்துக் கொள்ள முடிந்தது. அவனுக்கு சந்தேகம் வந்து விடக் கூடாது! அதனால் அவன் கேட்காமல் பூர்வியே மேலும் தகவல் கொடுத்தாள்.
“சென்னைல இருக்க நிறைய ஸ்கூல்ஸ்ல பேசிட்டேன் திவேஷ். அவங்க அட்மிஷன் கொடுக்குற நேரத்துல மட்டும் தான் புதுசா ஸ்டூடண்ட்ஸ் சேர்த்துப்போம்ன்னு சொல்லிட்டாங்க. நாம இந்தியா போறது தாமதமானால் நிரவி, ஈஷான் ஸ்கூல் அட்மிஷன் பிரச்சனை வரலாம்”
“புரியுது பூ. டீல் எல்லாம் முடிச்சாச்சு. இன்னும் கடைசி சில ப்ரோசீஜ
...
This story is now available on Chillzee KiMo.
...
அதை யோசித்த உடனேயே பூர்விக்கு ஈஷான், நிரவி நினைவு வந்தது. எத்தனை முட்டாள்த்தனமாக யோசிக்கிறாள். இவனை கொன்று அந்த குழந்தைகளை அனாதைகளாக்க வேண்டாம். அவள் யோசித்தது போல முள்ளை முள்ளால் எடுப்பது தான்