(Reading time: 8 - 16 minutes)
Ondru serntha anbu maarumo
Ondru serntha anbu maarumo

தான் அவளுக்கு உறுதுணையா இருக்கணும் ...... மறந்துடாதீங்க..... எந்த ஒரு நொடியும் அவளை தப்ப நினைச்சுடாதீங்கம்ம்மா..... என்று கூறி முடித்தார்.

                                                                                  **************************************

காரில் ஏறியதில் இருந்து பார்வதி அம்மாள் ஆதியிடம் ஏதும் பேச வில்லை. ஜோசியர் கூறியதை நம்பவும் முடியவில்லை அதேயே நேரத்தில் அவரால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

திரும்பி ஆதியை பார்த்தார்.... அவன் லாவகமாக தனது கார்யை செலுத்தி கொண்டு இருந்தான். அவர்கள் கார் சென்று கொண்டு  இருந்த ரோட்டின் இருபக்கமும் வயல்வெளிகள் பச்சை பசேலென்று காட்சி அளித்தன.

இதுவேயெ மற்ற நேரமாக இருந்து இருந்தால்.... தாயும் மகனும் சேர்ந்தேயே இந்த காட்சியை ரசித்து இருந்து இருப்பார்கள். ஆனால், தற்போது எதையும் ரசிக்கும் நிலையில் அவர்கள் இருவரும் இல்லை.

ஆதியை பொறுத்தவரை தனது அம்மா........... பொன்னி என்ற பெண்ணுக்கும் தனக்கும் பொருத்தம் பார்த்து விட்டார் என்று நம்பி கொண்டு இருந்தான். தன் தந்தைக்காக இந்த திருமணத்திற்கு ஒத்து கொண்டான். அதை தவிர அவன் மனதில் வேறு ஏதும் இல்லை. அதனால், ஜோசியர் என்ன கூறினார் என்பதை அறிய எந்த வித ஆர்வமும் அவன் காட்டவில்லை. தன்னால் இனி வீட்டில் உள்ளவர்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் வரக்கூடாது என்று மட்டும் நினைத்தான். அதனால், மற்றவர்கள் முன்னிலையில் தனது உணர்வுகளை மறைத்து கொண்டு வாழ ஆரம்பித்தான்.

தனது மகனை உற்று கவனித்ததில் பார்வதி அம்மாவாள்  எதையும் கண்டுபிடிக்க முடிய வில்லை.

ஒரு  தாயக  இருந்து கொண்டு எப்படி தன் மகனிடம்  உன் வாழ்க்கையில் ஏதேனும் தப்பு செய்து விட்டாயா என்று கேட்பது????? நான் அவனை அப்படியா வளர்த்தேன்???? இதுவரை ஆதி அவன் வாழ்வில் நடக்கும் அனைத்தையும் என்னிடம் பகிர்ந்து கொள்கிறான் என்று தானேயே நினைத்து கொண்டு இருந்தேன். ஏன் அகிலாவை பார்த்ததை கூட என்னிடம் தானேயே முதலில் கூறினான். அப்படி இருக்கையில் இது என்ன சோதனை கடவுளேயே..........

ஒரு வேலை நான் ஆதியிடம் இது பற்றி கேட்க போக..... அவன்  அப்படி ஏதும் இல்லை என்று விட்டால்.... என்னை பற்றி அவன் என்ன நினைப்பான்?????

இப்பொழுது வீட்டிற்கு சென்று அத்தையிடம் என்ன கூறுவது????? ஒருவேளை, ஜோசியரேயே அத்தையிடம் இந்நேரம் எல்லா விஷயங்களையும் கூறி இருந்தால் அவரை எவ்வாறு

14 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.