தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 06 - தனுசஜ்ஜீ
அவள் கூறியதற்கும் அவன் அவனுடைய க்யூட் ஸ்மைலையை பரிசாக தந்தான்.
பாஸ் இதுக்கும் சிரிப்பு தானா...
என்னது பாஸ் - ஆ...
ஆமா நீங்க எனக்கு பாஸ் தான நல்லாருக்குல்ல..
கொள்ளைக் கூட்டத் தலைவன கூப்பிடுற மாதிரியே இருக்கு என்று அவன் முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு கூற...
அவன் முக பாவனையை பார்த்து சிரித்தவள், எனக்கு பிடிச்சிருக்கு. இனி நான் அப்படிதான் கூப்பிடுவேன் பாஸ் ஓகே வா பாஸ்.
அம்மா தாயே முடியல....
சரி விடுங்க பாஸ்.
திரும்ப பாஸா. சரி ஓகே ஆமா அனிதா எங்க காலைல இருந்து ஆளையே காணோம் என்று ஏதும் தெரியாதவன் போல் கேட்டான்.
அதுவா பாஸ் அவ காலையிலேயே ஆஃபீஸ் சீக்கிரம் போனும்னு குதிச்சிக்கிட்டு இருந்தாளா, அதனால என்னை விட்டுட்டே போய்ட்டா...நான் ஆஃபிஸ் வந்து பார்க்கிறேன் ஆளக்காணோம். எங்கடா போயிட்டான்னு கால் பண்ணா எடுக்கல. அப்புறம் இப்பதான் அரை மணி நேரத்துக்கு முன்னாடி மெசேஜ் பண்ணா பாஸ். சீக்கிரம் காலையில தலைக்கு குளிச்சதால தலை வலி வந்துடுச்சு அதனால ஹஃப் டே ஆபீஸ் லீவ் சொல்லிட்டேனு ஹாயா சொல்றா. நானே ஃபர்ஸ்ட் டே ஆபீஸ் வரேன். இன்னிக்குப் பார்த்து இப்படி பண்ணிட்டா... ஏதோ நீங்க எனக்கு தெரிஞ்சவங்களா இருந்ததால சமாளிச்சுட்டேன். இதுவே புதுசா யாராவது இருந்தா நான் பாவம் தான பாஸ்.
அவன் அவளையே இமை வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
பாஸ் என்று உரக்க அழைத்தாள்.
அதில் கலைந்தவன் கண்ணை சிமிட்ட...
என்னாச்சு பாஸ்...
ஒரு நிமிஷம் என்று அவன் உள்ளங்கையை காதில் வைத்து நன்கு தேய்த்துக் கொண்டான். நீங்க இவ்ளோ பேசுவீங்களா... என்று கேட்க
ச்ச....ச்ச..... ஃபர்ஸ்ட் டே-ல அதான் கொஞ்சமா பேசுனே...
ஓ..... இது கொஞ்சமா (இதில இவ பாவமா!!! கடவுளே என்ன காப்பாத்து என்று தனக்குள் பேசிக் கொண்டான்)
ம்ம் ....