தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 15 - ஜெபமலர்
ஹாய் ஜனனி என்றவாறே சசிதரன் வரவும் அந்த பெண் விடை பெற்று கிளம்பி விட்டாள்.
ஜனனி... யார் அது? பெரிய ரகசியம் சொன்னாங்க போல என்றான்.
அந்த பெண் சொன்னதை நண்பனாய் இருந்தாலும் சசியிடம் சொல்ல விரும்பவில்லை ஜனனி.
எஸ் எஸ்... பெரிய ரகசியம்... சிதம்பர ரகசியம்... அது சரி... வரை இவ்வளவு நேரமா என்று பேச்சை மாற்றினாள்.
சாரி ஜனனி... கொஞ்சம் லேட்மா என்றவன் அவள் அருகில் அமர்ந்தான்.
சிறிது நேரம் இருவரும் அமைதியாக இருக்க எப்படி இருக்க ஜனனி என்றான் அவளை ஆராயும் பார்வையுடன்...
நீ என்னை பார்த்து எப்படியும் ஒரு வருடம் இருக்காது என்று யோசித்தவள் தாராளமாக இருக்கும்... அதனால் இப்போ நீ தான் சொல்லனும். நான் எப்படி இருக்கிறேன் என்றாள்.
மீண்டும் அவளையே பார்த்தவனுக்கு பல மாற்றங்கள் தெரிந்தாலும் எதுவும் சொல்லாமல் நீ எப்போதும் சந்தோஷமா இருக்கனும் ஜனனி என்றான்.
அவனைப் பார்த்து சிரித்தாள் ஜனனி. அந்த சிரிப்பு எதை உணர்த்துகிறது... இனி எப்போதும் சந்தோஷம் தான் என்றா? அல்லது எங்கே சந்தோஷம் வரப் போகிறது என்றா? என்பதை அறிந்து கொள்ள உற்று நோக்கினான் சசி. ஆனாலும் புரிந்து கொள்ள இயலவில்லை அவனுக்கு...
அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவனிடம் சந்தியா பற்றி என்ன முடிவு செய்து இருக்க சசி...
வேலையா... காதலா என்று முடிவு செய்வது பதில் இல்லா கேள்விக்கு விடை தேடுவது போல் இருக்கு...
பதில் இல்லா கேள்வி என்று நீ சொல்லும் கேள்விக்கு கூட தவறான விடை சொல்ல இயலுமே... அப்படி இருக்கும் போது தீர்வு இல்லா பிரச்சினை என்று நீ நினைப்பது தவறு. தீர்வு கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் ஏதாவது ஒரு வழி தேடு...
வழி தேடி என்ன செய்ய ஜனனி... இரண்டில் ஒன்றை தேர்வு செய் என்று உறுதியாக இருக்கிறாளே...
அதே அளவு உறுதியான இன்னொரு விஷயமும் இருக்கிறது. உன்னை தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டாள் என்பதும்....
அது எனக்கும் தெரியும்... ஆனால்
என்னடா ஆனா ஆவனானு சொல்லிட்டு இருக்க... சீக்கிரம் ஏதாவது ஒரு வழி தேடு... அந்த வழியில் சென்றால் உனக்கு தீர்வு கிடைக்கும்.