தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 07 - தனுசஜ்ஜீ
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறு நாளே ஏங்க வைத்தாய்
வெயிலா?? மழையா??
வலியா?? சுகமா?? எது நீ.......
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம்….
திடீரென்று தன் அருகில் கார் வந்து நிற்கவும். ஒரு நொடி தூக்கிவாரிப் போட, அடுத்த நொடியே மிகுந்த கோபத்துடன் கார் காரனை திட்டுவதற்காக திரும்பியவள்.
டார்க் மெரூன் கலர் சர்ட், ஒயிட் கலர் பேண்ட் அணிந்து மிகவும் ஸ்டைலாக அந்த காரில் இருந்து இறங்கினான். வேற யாரு நம்ம கதிர் தான்.
திட்டுவதற்காக வாய் எடுத்தவள் அப்படியே ஆஃப் ஆயிட்டா.....கதிர் எப்பொழுதும் ஹாண்ட்சம் தான். இன்று மிகவும் வசீகரமாக இருந்தான். காரணம் முகத்தில் இருந்த இறுக்கம் நீங்கி சிறு மென்னகை பூசிக் கொண்டிருந்தது அவன் முகம். அவளை ஐந்து நாட்கள் கழித்து காணப்போகிற உற்சாகமா?? அவனுக்கு ஏன் என்று தெரியவில்லை.
அவன் கடுகடு முகத்தையே அவ்வளவு ரசித்தவள்' அவனுடைய இந்த முகம் கண்டதும் ஃப்ரீஸ் ஆகி விட்டாள்.
அவள் அருகில் வந்து முகத்திற்கு நேராக சொடுக்கு போட அப்பொழுதுதான் நினைவுலகத்திற்கு வந்தாள். அவளையே வைத்த கண் வாங்காமல் சிறிது நேரம் பார்த்தான். (பார்த்தானா??? ரசித்தானா???) மெருன் கலர் காட்டன் புடவை அவளுடைய சந்தன நிறத்திற்கு மிகவும் எடுப்பாக இருந்தது. ஒல்லியும் இல்லாமல் குண்டும் இல்லாமல் அளவான உடற்கட்டு. நீளமான முடியினை பின்னலிட்டிருந்தாள். சிறிது நேரம் அவளை விழுங்கியவன். அவள் அருகில் உள்ள கார் கதவைத் திறந்து அவளை ஏறிட்டான்.
அவளுக்கு மிகவும் ஆச்சரியமாகி போனது. நம்ம ஆளு தானா இது. கதவெல்லாம் திறந்து விடுகிறான். வேணா அனிதா ரொம்ப சந்தோஷப்படாத. இவன் எந்த நேரத்துல என்ன பண்ணுவான்னு தெரியாது. அப்படியே கெத்தா மெயிண்டன் பண்ணு ம்ம்....
அமைதியாக அவள் காரில் ஏற, கார் மிதமான வேகத்தில் சென்றது. அவன் அவளை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வண்டியினை இயக்க, அவன் பார்க்கிறான் என்று தெரிந்தும் திரும்பாமல் அவள் வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.