(Reading time: 5 - 9 minutes)
Thoora theriyum megam
Thoora theriyum megam

மட்டும் அறைக்குள்ளேயே முடங்கிக் கொண்டாள்.

       வழக்கம் போல் கூடத்திற்குச் சென்று எல்லோர் மத்தியிலும் காட்சிப் பொருளாய் நின்று கொண்டிருந்த சுலோச்சனாவை அறைக்குள்ளிருந்தபடியே கவனித்துக் கொண்டிருந்த அர்ச்சனா அவ்வப்போது அந்த சம்பூர்ணத்தையும் கவனிக்கத் தவறவில்லை. “இந்தப் பொம்பளை ஏன் இப்படி பாறாங்கல்லாட்டம் மூஞ்சியை வெச்சுக்கிட்டு உட்கார்ந்திட்டிருக்கா?...இவளை யாரு இங்க வரச் சொல்லி அழைப்புக் குடுத்தாங்க?...சனியன்!...வெட்கமே இல்லாம அழையா விருந்தாளியா வந்து உட்கார்ந்திட்டிருக்குது!..வந்ததுதான் வந்திச்சு...அட்லீஸ்ட் மூஞ்சியக் கழுவி...லட்சணமா ஒரு பொட்டு வெச்சிட்டு வந்திருக்கலாம் அல்ல?...மங்கல காரியம் பேசற இடத்துக்கு தூங்கி எழுந்திரிச்சு அப்படியே...நெத்தில பொட்டுகூட வைக்காம வந்து உட்கார்ந்திட்டிருக்கு! ” மனசுக்குள் திட்டித் தீர்த்தாள்.

சில நிமிடங்களில் திரும்பி வந்த சுலோச்சனாவிடம் மெல்லக் கேட்டாள் அர்ச்சனா, “என்னக்கா மாப்பிள்ளையைப் பார்த்தியா?...பிடிச்சுதா?”

“ம்ம்..பார்த்தேன்!...பிடிச்சுது!” என்றாள் சுலோச்சனா சுவாரஸியமேயில்லாமல்.

“அதைத்தான் கொஞ்சம் சந்தோஷமாச் சொல்லுறது!’ அர்ச்சனா கோபமாய்ச் சொல்ல,

“பாதிக் கிணறுதானே தாண்டியிருக்கோம்?...அதுக்குள்ளார சந்தோஷப்பட்டா எப்படி?...முழுக் கிணறையும் வெற்றிகரமா தாண்டி முடிச்சதுக்கப்புறமா சந்தோஷப்பட்டுக்கறேனே?”

“என்னமோ பண்ணு!” என்று எரிச்சலைக் காட்டிய அர்ச்சனா திடீரென்று, “அக்கா..நீ ஒண்ணு கவனிச்சியா?...நீ அங்க போய் நின்னு எல்லோரையும் பார்த்து “வணக்கம்” சொல்லிக் கும்பிட்டாய் அல்ல?...அப்ப எல்லோருமே ஒரு மரியாதைக்காக திருப்பிக் கும்பிட்டாங்க!...ஆனா...அந்த சம்பூர்ணம் என்ன பண்ணினா பாத்தியா?”

“ம்ம்...பார்த்தேன்...பார்த்தேன்!...பதிலுக்கு கையெடுத்துக் கும்பிடாம...முகத்தை வேற பக்கமா திருப்பிக்கிட்டா!...பரவாயில்லை விடுடி...”

 

“எதுக்கு...எதுக்கு இந்தப் பொறாமை அவளுக்கு?...என்னமோ வெத்தலை பாக்கு வெச்சு அழைச்ச மாதிரி இங்க வந்து உட்கார்ந்துக்கிட்டு இதுல லொள்ளு வேற...கிழட்டுக் குரங்கு!” தாளமாட்டாமல் பிதற்றினாள் அர்ச்சனா.

“சரி...சரி...விடுடி...அவளுக்குத் தெரிஞ்ச நாகரீகம் அவ்வளவுதான்!” சுலோச்சனா விட்டுக் கொடுத்துப் போக,

“இல்லைக்கா...இவளையெல்லாம் வீட்டுக்குள்ளாரவே விடக்கூடாது!”

“ஏய்...நாம குடியிருக்கறது அவங்க வீட்டுல..அதை ஞாபகத்துல வெச்சுக்க!.. “பொசுக்”குன்னு “பொட்டியைக் கட்டுங்கோ!”ன்னுட்டான்னா...நம்ம பாடு...படாத பாடாயிடும் தெரிஞ்சுக்க!” யதார்த்த

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.