இல்லை. இப்ப நடந்த எல்லாத்தையும் மறந்திடு. அது அவ்வளோ சுலபமில்லனு தெரியும். ஆனா இதை நீ கடந்துதான் ஆகணும் சரியா?. போ காலேஜ் கிளம்பு டைம் ஆச்சு. இனிமே இந்த வீட்ல இதைப்பத்தி யாரும் பேசக் கூடாது” எனச் சற்றே கராராக கூறினான்.
அவன் வார்த்தைகளை கேட்ட தாத்தா கோபத்துடன் அங்கிருந்து அகன்று தன்னறைக்குச் சென்றார். பாட்டி அவரை பின்த் தொடர்ந்தார். வீட்டில் அனைவரும் இதை கவனித்தனர்.
தனுஷ் சஞ்சய்யை அவன் அறைக்கு அழைத்து சென்றான் “ரெடி ஆகு . . காலேஜ்க்கு டைம் ஆச்சு . நானே ட்ராப் பண்றேன்”
அடுத்து அம்மாவிடம் வந்தவன் அவரை தோளில் சாய்த்து கொண்டான் “அம்மா சஞ்சய் நம்மை விட்டு போக மாட்டான் . அவன் நமக்கு தான் .” அவருக்கு ஆறுதலாய் இருந்தது எனினும் தன் மாமனார் என்ன முடிவு எடுப்பார் என்னும் அச்சம் நடுங்க செய்தது.
“உங்க தாத்தா?” விசும்பல் ஊடே அம்மா சொல்ல . . .
“தாத்தாவ நான் பாத்துக்கிறேன்மா ” என்றான் தனுஷ். அது அத்தனை சுலபமில்லை என அவனுக்கே தெரியும்.
தாத்தா அறைக்கு சென்றான் அவர் எதோ ஒரு நாளிதழை எடுத்து படிப்பதைப்போல பாவனை செய்தார்.
“தாத்தா” இவன் மெல்ல அழைக்க . . . “
அதே நொடி பிருந்தாவிடமிருந்து போன் வந்தது. அழைப்பை துண்டிக்க மனமில்லாமல் தன் மனக்குமுறலை முயன்ற அளவு மறைத்து “பிருந்தா” என்றவாறு தனுஷ் பேச . . .
அழைப்பிதழ் அனாதையாய் வாயிலில் கிடந்தது.
வானவில் வளையும் . . .