டி.வி.ல காட்டி ஃபேமஸ் பண்ணி விட்டால்தானே...வெளியூர் மக்களெல்லாம் இங்க வந்து இந்த அம்மனை வணங்கி...நன்மைகளை அடைய முடியும்?” என்றான்.
“என்ன ரவி?...இப்ப கோயிலுக்கெல்லாம் மார்க்கெட்டிங் பண்ண ஆரம்பிச்சிட்டியா?” என்று தமாஷாய்க் கேட்டு விட்டு, “சரி...சரி...நாளைக்கு காலைல...ஒரு காமிராமேனையும் ஒரு லேடி ரிப்போர்ட்டரையும் அனுப்பறேன்!...இடம் எங்கே?ன்னு மட்டும் கரெக்டா சொல்லிடு” என்றான் அருண்.
ரவீந்தர் கோயில் இருக்குமிடத்தை தெளிவாக விளக்கி விட்டு இணைப்பிலிருந்து வெளியேறினான். “ஸாலிமர் டி.வி.யிலிருந்து ஒரு காமிராமேனும், லேடி ரிப்போர்ட்டரும் நாளைக்கு வர்றங்களாம்!...அவங்க கோயிலை வீடியோ எடுத்திட்டு...அப்படியே என்னையும்...இந்த கோகுலையும் பேட்டி எடுக்கப் போறாங்க!...அந்த நேரத்துல பொது மக்கள் இருந்தா அவங்க்ளையும் எடுக்கச் சொல்லலாம்”
“அவ்வளவுதானே நான் நம்ம ஆட்களை...காலைல வரச் சொல்லிடறேன்” என்றார் சுதாகர் ஜி.
*****
மறுநாள் காலை மதுரைக்கு மார்க்கெட்டிங் டூர் புறப்பட வேண்டிய ரவீந்தர், தன் புரோக்ராமை மதியத்திற்கு மேல் புறப்படுவதாக மாற்றிக் கொண்டு, தன்னுடன் கோகுலையும் அழைத்துக் கொண்டு கோயிலுக்கு வந்தான்.
அவர்கள் எதிர்பார்த்ததை விட மக்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.
டி.வி.கேமரா மேனும், அந்த லேடி ரிப்போர்ட்டரும் அவர்களுக்கு முன்னாடியே வந்து காத்திருந்தனர். அவர்களைப் பார்த்ததும் வேக வேகமாய் அவர்களை நோக்கிச் சென்ற ரவீந்தர், “நான்தான் ரவீந்தர்...அருணோட ஃப்ரெண்ட்” என்றான்.
“ஓ...ஐ யாம் கிளாரா...”என்று சொல்லி சற்றும் சங்கோஜமில்லாமல் அவள் கையை நீட்ட, தயக்கத்துடன் கை குலுக்கினான்.
“ஆக்சுவலா நாங்க...பொள்ளாச்சியில் ஒரு பொலிடிகல் புரோக்ராமைக் கவர் பண்ண வந்திருந்தோம்!...அதை முடிச்சிட்டு கிளம்பும் போதுதான் அருண் போன் பண்ணினாரு!...அதனாலதான் இவ்வளவு சீக்கிரம் வந்துட்டோம்” என்ற அந்தக் கிளாரா, காமிராமேனைப் பார்த்து, “சுந்தர் வா...மொதல்ல கோயிலை ஷூட் பண்ணிடுவோம்” என்றபடி நகர்ந்தாள்.
சுதாகர்ஜி மக்களிடம் என்ன பேசுவது?...எப்படிப் பேசுவது?...என்பதைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
கோயிலை வீடியோ படம் எடுத்து முடித்து விட்டுத் திரும்பியவர்கள், ரவீந்தரை கோயிலுக்கு