காட்டினார். பிறகு அதை சம்யுக்தாவிடம் நீட்டினார். அவள் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டாள்.
சுதாகர்ஜிக்கு குழப்பமாயிருந்தது.
பின்னர் சன்னதிக்கு வெளியே வந்தவர், வெளியில் நின்று கொண்டிருந்த அப்பெண்ணின் தாயார் முன் தட்டை நீட்ட, அவளும் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டாள். “இனி உங்க பெண்ணை வெளியில் கூட்டிட்டு வந்திடுங்க” என்றபடி அந்த கற்பூரத் தட்டை மற்றவர்களிடம் கொண்டு போனார்.
தாயாருடன் வெளியே வந்த அந்த சம்யுக்தா கோயிலை ஆச்சரியமாய்ப் பார்த்தாள். அங்கு நின்று கொண்டிருந்தோரை புன்னகை முகத்தோடு பார்த்து விட்டு, தன் தந்தையிடம், “டாடி...இது என்ன கோயில்?...நாம எதுக்கு இங்க வந்திருக்கோம்?” இயல்பான குரலில், இயல்பாய்க் கேட்டாள். அவளிடம் மனநிலைப் பிறழ்விற்கான அடையாளமே சிறிதும் இல்லை.
“அம்மா...இது “உப்பாயம்மன் கோயில்”...பொள்ளாச்சி” என்றார் சஞ்சீவ் குமாரசாமி.
“டாடி...ஸம்திங் பெக்கூலியர் ஹியர்!...சன்னதிக்குள்ளார நிற்கும் போது, அம்மன் என்னைப் பார்த்துச் சிரிச்சாங்க...எழுந்து என் பக்கத்தில் வந்து நின்னு என் தலையைத் தடவினாங்க!...அப்ப எனக்குள் ஒரு வைப்ரேஷன் ஏற்பட்டுச்சு!...என் மேல் இருந்த ஏதோ ஒரு அழுக்கு கழுவப்பட்ட மாதிரி ஒரு புத்துணர்வு தோன்றிச்சு!..” என்றாள் திரும்பி அம்மனைப் பார்த்தவாறே.
சுதாகர்ஜிக்கு மயக்கமே வந்து விடும் போலானது. “கடவுளே?...இதென்ன கூத்து”
அதைக் கேட்ட அடுத்த விநாடியே அந்த சஞ்சீவ் குமாரசாமி வேக வேகமாய்ச் சென்று அம்மன் சன்னதி முன் தரையில் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து, “தாயே...என் மகளைக் காப்பாற்றிட்டே தாயே!...உனக்கு நான் என்ன செய்யணும்?னு சொல்லு தாயே!...என்னோட உடல் பொருள் ஆவி அத்தனையையும் உனக்கே காணிக்கையாக்கறேன் தாயி” கதறியழுந்தார்.
அறங்காவலரும், மற்றவர்கள் பிரமை பிடித்தது போல் அப்படியே உறைந்து நின்றனர்.
கணவரின் செயலைப் பார்த்த மனைவியும் அவ்வாறே தரையில் விழுந்து வணங்கினாள்.
சில நிமிடங்களுக்குப் பின் எழுந்து வந்த அந்த சஞ்சீவ் குமாரசாமி, நேரே அறங்காவலர் ராமலிங்கத்திடம் வந்து, “அய்யா...உள்ளூர் மனநல மருத்துவர்கள் முதற் கொண்டு...வெளிநாட்டு சைக்கியாட்ரிஸ்ட் வரைக்கு எல்லோரும் என் மகளை பரிசோதிச்சிட்டு...கை விரிச்சிட்டாங்க!..நானும் என் மனைவியும் இவ வாழ்க்கையே முடிஞ்சு போயிடுச்சு!ன்னு நெனச்சோம்!...ஆனா...இந்த அம்மன்...இந்த அம்மன்...தானே நேர்ல வந்து எங்க மகளுக்கு சிகிச்சை அளிச்சிட்டுப் போயிருக்கு!...என்னால...என்னோட உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கவே முடியலை!...நான் இந்த அம்மனுக்கு ஏதாவது செஞ்சே ஆகணும்!...செஞ்சே ஆகணும்” என்றபடியே கோவிலை நாலாப் பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்து விட்டு, “நாளைக்கே அஞ்சு கோடி