“ஈ.ஆர். என்டர்பிரைசஸ் அனுப்பிய ரா மெடிரியலை (Raw materials) எதுக்கு ரிஜக்கெட் பண்ணின” தாத்தா நேரடையாக கேள்வி கணையை தொடுத்தார்.
“ டிபக்டிவ்(Defective) மெடிரியல்ஸ் அனுப்பியிருந்தாங்க அதனால . . ”
“அவங்க நமக்கு எத்தன வருஷமா சப்ளை செய்றாங்க தெரியுமா?”
“தெரியும் தாத்தா . . ஆனா” என முடிக்கும்முன் நிறுத்து என கையை காட்டியவர்.
“ அந்த கம்பெனி எம்.டி. கதிரவனோட அப்பா நமக்கு ஆரம்பகாலத்துல நிறைய உதவி செஞ்சிருகாங்க தெரியுமா?”
“நான் இல்லனு சொல்ல வரல . . இவங்கனால நம்ம பிராடக்டை யாரும் ரிஜகெட் பண்ணிட கூடாதுனு நினைக்கிறேன். பிஸ்னஸ் வேற ரிலேஷன்ஷிப் வேற . . நீங்கதான் எனக்கு சொல்லிக் கொடுத்தீங்க . . நீங்கதான் என் குரு” என தனுஷ் சொன்னதும் தாத்தா வாயடைத்து போனார்.
இதைக் கேட்டு “ப்ரீ ஹிட்” என சஞ்சய் அம்மாவிடம் கிசுகிசுத்தான்.
“சாந்தி தட்டு போடும்மா எனக்கு பசிக்குது” என்றார் தாத்தா மனதில் தனுசை மெச்சியபடி.
“அம்மா இன்னொரு அப்பளம்” என சஞ்சய் கூற
தாத்தா சாப்பிட வருகிறார் . . சஞ்சய் கலாட்டா செய்வான் என்பதால் “டேய் ஓடிடு” என அம்மா மிரட்ட
சஞ்சையும் சோக மனதோடு இரண்டாம் அப்பளத்தை தியாகம் செய்தான்.