“ப்ரோ தாத்தா தலைல ஐஸ்கட்டி இல்ல பிரிட்ஜயே வெச்சிட்ட ” என பெரியதாக நகைத்தான்.
“இப்பதான் ஒரு பஞ்சாயத்து முடிஞ்சிருக்கு மவனே . . . அடுத்தை ஆரம்பிக்காத” என தனுஷ் செல்லமாய் அதட்டி அனுப்பி வைத்தான்.
“எல்லாரும் என்னை அனுப்பறதுலயே குறியா இருக்கீங்க” என முணுமுணுத்தபடி தன் அறைக்குள் புகுந்தான்.
மறுநாள் காலை தனுஷ் அலுவலகத்தில் வேலையில் முழ்கியிருந்த சமயம் . .
“சார் நம்ம விமல் . . புரொடக்ஷன்ல இருக்கிற குவாலட்டி கன்ட்ரோல் இன்ஜினியர் உங்கள பார்க்கணுமாம்” என தனுஷ் பி.ஏ கோவிந்தன் சொல்ல
அனுப்பு என தலையசைத்தான் தனுஷ்.
“வணக்கம் சார்” என உள்ளே வந்தான் விமல்.
“ வா விமல் . . . எப்படி இருக்க? உட்காரு” என தனுஷ் உபசரித்தான். தனுஷின் இந்த பாகுபாடில்லாத அனுகுமுறை அனைவருக்கும் பிடித்தது.
விமல் “சார் என் அக்காக்கு கல்யாணம். நீங்க கண்டிப்பா குடும்பத்தோட வரணும்.” என கல்யாண பத்திரிக்கையை நீட்டினான்.
வாங்கிய தனுஷ் “ரொம்ப சந்தோஷம்” என்றபடி கல்யாண வேலைகளை பற்றி கேட்டறிந்தான்.