*******************
தென்றல்வாணனும், வினோதனும் வீட்டை அடைந்து கேட்டை திறந்து உள்ளே சென்றார்கள்.
வாசல் கதவை சாவிக் கொண்டு திறக்க போன தேன், அதிர்ந்து நின்றான்.
அங்கே வாசல் கதவில் ரத்தம் தோய்ந்த ஒரு பொம்மை இருந்தது!
கர்சீப்பின் துணையுடன் அந்த பொம்மையின் கையில் இருந்த காகிதத்தை எடுத்து பிரித்து படித்தான் வினோதன்.
‘முடிந்து போன கேஸை தேவை இல்லாமல் திறந்து நோண்டினால் அடுத்து ரத்தம் சிந்த போவது இன்னொரு பொம்மை இல்லை’
கிறுக்கலான கையெழுத்தில் எழுதப் பட்டிருந்தது.
அதில் இருந்ததை சத்தமாக படித்த வினோதன், தேனை நிமிர்ந்து பார்த்தான்.
‘குட்! நாம சரியான ரூட்டில தான் போயிட்டு இருக்கோம். நான் அபினவ் கிட்ட வந்து இதை கலக்ட் செய்து ஃபோரன்சிக் லேபுக்கு அனுப்ப சொல்றேன். வா, நாம போடோஸ் பார்ப்போம், வினோதன். அப்போ தான் நாளைக்கு ஸ்பாட்டுக்கு நேரா விசிட் செய்ய வசதியா இருக்கும்,” என்றான் தென்றல்வாணன்.
தொடரும்...