சுவாதியின் இதயம் அடிப்பது அவளுக்கே கேட்பது போல படபடப்பாக இருந்தது...!
பாத்திரங்களை அங்கேயே போட்டு விட்டு, ஓடிச் சென்று பார்க்க வேண்டும் என்று மனம் பரபரத்தாலும், மனதை அடக்கிக் கொண்டு சமையலறையின் வாயில் சுவரில் சாய்ந்தப் படி நின்று காத்திருந்தாள் சுவாதி...
அவளின் மனதில் இருக்கும் ஆசையின் அளவை நினைத்து அவளுக்கே கவலையாக இருந்தது...
ஒருவேளை வந்திருப்பது வேறு யாரேனும் என்றால், அந்த ஏமாற்றத்தை அவளால் தாங்க முடியுமா???
அந்த கேள்வியே அவளுக்கு கசந்தது...
கசப்பாக இருந்தாலும்.... அதற்கும் தயாராக இருப்பது தான் சரி....
மனதை அடக்க அவள் முயற்சி செய்ய...
“வலதுக் காலை உள்ளே வச்சு வாம்மா....” என்ற பத்மாவதியின் குரல் கேட்டது...!
அதற்கு மேல ஆவலை அடக்க முடியாமல் நின்ற இடத்தில் இருந்தே எட்டிப் பார்த்தாள் சுவாதி!
முகம் சிவந்து மின்ன, கண்களில் கனவுகள் கொப்பளிக்க அஸ்வினின் கையை பிடித்த படி வீட்டினுள் வந்துக் கொண்டிருந்தாள் விஷ்ணுப்ப்ரியா....!
ஆம், அவளுக்கு தெரிந்த அதே விஷ்ணுப்ப்ரியா தான்..!
அவளின் கணவனின் தங்கை விஷ்ணுப்ப்ரியாவே தான்....!
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.