மூன்று வாரங்கள் மெல்ல ஓடிப் போனது...
அன்றும் Say it with flowersக்குள் வந்து ஹான்ட்பேகை வைத்து விட்டு, அன்றைய பேப்பரை கையில் எடுத்தாள் அத்விதா...
அவளின் செய்கையை கவனித்த கயல்விழியின் முகத்தில் புன்னகை உதயமானது!
“நீ அதுல தேட வேண்டாம், அத்விதா... நானே உனக்கு நியூஸ் சொல்றேன்... கார்த்திக் நாளைக்கு எர்லி மார்னிங் சென்னை வரான்...”
கயல்விழி சொன்னதைக் கேட்டு நம்ப முடியாது பார்த்தாள் அத்விதா.
“என்னக்கா சொல்றீங்க?”
“ஹாஃப் ஆன் ஹவர் முன்னாடி தான் கார்த்திக் பேசினான்... ஃபிளைட் ஏறப் போறேன்னு சொன்னான்... பொதுவா அதெல்லாம் சொல்லாமல் நேரா வீட்டுக்கு தான் வந்து நிற்பான்... நான் அவனுக்கு நீ எப்படி அவனுக்காக உருகி, உருகி வெயிட் செய்றேன்னு சொல்லி மெசேஜ் அனுப்பி இருந்தேனா அதனால அதிசயமா போன் செய்து சொன்னான்... உன் கிட்ட பேச டைம் இருந்திருக்காது... அதுக்காக கோபப்...” கயல்விழியை பேசி முடிக்க விடாமல்,
“கயல் அக்கா, யூ ஆர் ஸோ ஸ்வீட்!” என்று சொல்லியப்படி கட்டிப்பிடித்து, அவளின் கன்னங்களில் மாறி மாறி முத்தம் பதித்தாள் அத்விதா.
“அத்விதா...!!!???” கயல்விழி திகைத்துப் போய், வெட்கத்துடன் அவளை விலக்கினாள்.
“என்ன நீங்க இவ்வளவு வெட்கப்படுறீங்க? உங்க ஆளு ரொம்ப பாவம் க்கா!”
“ஹேய்...” என்றாள் கயல்விழி பாதி அதிர்ச்சியும், பாதி கோபமுமாக!
“உண்மையை சொன்னா கோபப்படுறீங்க... சரி, அதெல்லாம் அப்புறம்! முதல்ல கே.டி எந்த
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.