ரம்யாவிடம் விபரங்கள் கேட்டு தெரிந்துக் கொண்டு திரும்பிய ஸாரா, காரில் ஏறிய உடனேயே, கணவனிடம் தன்னுடைய போனில் சேவ் செய்திருந்த நம்பரை கொடுத்தாள்.
“சந்துரு, இந்த நம்பர் இருக்க அட்ரஸ், இல்லைனா சரௌன்டிங் ஏரியா எதுன்னு எனக்குத் தெரியனும்... எப்படியாவது கண்டுப்பிடிக்க முடியுமா???” ஸாராவின் குரல் பரபரப்புடன் ஒலித்தது!
சந்திரன் யோசனையுடன் மனைவியைப் பார்த்தான்...
“என்ன பார்க்குறீங்க??? சாந்தி அங்கே தான் இருக்கா... நான் அவளைப் போய் பார்க்கனும்... இந்த நம்பர் டீடெயில்ஸ் நாம கண்டுப்பிடிக்கனும்...”
“நான் உனக்கு கரக்ட் அட்ரஸே வாங்கித் தரேன்... ஆனால், நீ எனக்கு உன் ரகசியத்தை சொல்லு...”
“ரகசியமா? என்ன ரகசியம்???”
“எப்படி சாந்தியோட சித்தி பொய் சொல்றாங்கன்னு கண்டுப்பிடிச்ச???”
“நான் எங்கே கண்டுப்பிடிச்சேன்? எல்லாம் அந்த காபி கேட் சாந்தியால தான், சந்துரு...”
“புரியலையே... என்ன???”
“மை டியர் சந்துரு... நாம லவ் செய்யும் போது சண்டைப் போட்டா நான் ஒரு டையலாக் சொல்வேனே, உங்களுக்கு ஞாபகம் இருக்கா???”
“என்னது???”
“ப்ச்... ‘டேய் சந்துரு... இனிமேல் உன்னைப் பார்க்கவே மாட்டேன், பேசவே மாட்டேன்... நீயா தேடி வந்தாலும் ஆள் வச்சு செத்துப் போயிட்டேன்னு சொல்ல சொல்வேன்...’ ன்னு
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Cute jodi sikirama serthu vainga Binds.