ஷ்ரேயான்ஷின் கேள்வி அபினவை யோசிக்க வைத்தது... ஆனாலும் தீபா மற்றும் ரச்னா மீது அவனுக்கு இருந்த கோபம் குறையவில்லை!
“வேறென்ன.... அவங்க...” என படபடப்புடன் தொடங்கிய அபினவின் பேச்சில் குறுக்கிட்டுப் பேசினான் ஸ்ரேயான்ஷ்...
“எந்த அளவுக்கு நான் ரச்னா மனசை ஹர்ட் செய்திருந்தா அவ உன் மனைவி கிட்ட ஹெல்ப் கேட்ருப்பா, அவங்க சொன்ன அப்படி ஒரு ப்ளான்க்கு ஓகே சொல்லி இருப்பா... “
“...”
“நான் எந்த அளவுக்கு என் மனைவியை இக்னோர் செய்திருந்தா உன் மனைவி மாதிரி நல்ல இன்டலிஜன்ட் லேடி அப்படி ஒரு ஐடியா கொடுத்திருப்பாங்க??”
“....”
“அவங்க இரண்டுப் பேரும் அப்படி ஐடியா போட்டது தப்புன்னா, அவங்களை அந்த அளவுக்கு தள்ளினது நான் தான்... விஷயம் தெரிஞ்சதுமாவது நாம யோசிச்சு இருந்திருக்கனும்... அதுக்கு மாறா, நாம இரண்டுப் பேரும் இன்னும் அதை ஊதி பெருசாக்கிட்டோம்... தப்பு நம்ம மேல தான்...”
அபினவ் யோசனையுடன் அமைதியாக நின்றான்...
“ஒரு ஃபிரென்டா உன் கிட்ட ஒன்னு சொல்றேன் அபி... உன் வைஃப் கிட்ட போய் மன்னிப்பு கேளு... நீ அவங்களை திட்டிட்டு இப்படி பேசாம இருக்குறது சரி இல்லை... நான் ரச்னாவோட திரும்ப வந்த பிறகு, நானும் அவங்க கிட்ட நேராவே வந்து பேசி மன்னிப்பு கேட்குறேன்... எங்க இரண்டுப் பேர் காரணமா உங்களுக்குள்ளே சண்டை வந்திருக்கது சரி இல்லை... நீயே போய் பேசி சரி செஞ்சிடு...”
அபினவ் தீபாவுடனான சண்டையில், அவளை திட்டியதை மட்டும் சொல்லி விட்டு, அவளை
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.