(Reading time: 6 - 12 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

ஒரு சில நிமிடங்கள் பாரதி பதிலுக்காக காத்திருந்த விவேக்... அவள் மௌனமாக இருக்கவும்,

  

"ஓகே பாரதி, எனக்குப் புரியுது. உனக்கு என்னைப் பிடிக்கலை. சரி, இனி நான் இந்த விஷயம் பேச மாட்டேன். சாப்பிடு, இது தான் நம்ம இரண்டுப் பேருடைய கடைசி சந்திப்பு..." என்றான் கசப்புடன்.

  

அவன் பேச்சையும், தோரணையையும் கவனித்த பாரதி வருந்தினாள்... ஆனாலும்...??!!!

  

விவேக் அத்தோடு விஷயம் முடிந்தது என்பதுப் போல் அமைதியாக உணவை உண்ணத் தொடங்கினான். பாரதியால் அது இயலவில்லை. அவள் உணவைத் தொடாமல் இருப்பதை பார்த்து விட்டு,

  

"அது தான் உனக்குப் பிடிக்காத விஷயம் பேச மாட்டேன்னு சொல்லியாச்சுல, அப்புறமும் என்ன? இன்னைக்கு ஒரு நாள் என்னுடன் சாப்பிடும் கொடுமையை அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளலாம் தானே?" என்றான் விவேக்!

  

பாரதிக்கு அவனின் கோபம் புரிந்தது! அதற்கு மேல் அவன் பொறுமையை சோதிக்க விரும்பாமல், தட்டில் இருந்த உணவை ஸ்பூனால் அலைந்தாள். அடுத்த சில நிமிடங்கள் அங்கே பேச்சில்லாமல் கழிந்தது. 

  

விவேக்கின் கோபம் பாரதியை பெரிதும் பாதித்தது. அவன் இப்படி கோபத்துடன் இருப்பது பிடிக்காமல்,

  

"சாரி விவேக்!" என்றாள், எதற்காக மன்னிப்பு கேட்கிறாள் என்பது புரியாமலே.

  

விவேக் பதில் எதுவும் சொல்லாது அவளை ஒரு முறை நிமிர்ந்து பார்த்து விட்டு, மீண்டும் உணவில் கவனத்தை செலுத்தினான். ஆனால் பாரதியால் அதைத் தாங்கி கொள்ள இயலவில்லை. அந்தக் கணம், அவனை சமாதானம் செய்வது தான் முக்கியம் என்று தோன்றவும்,

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.