This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சுவாதியின் மனம் வெறுத்துப் போயிருந்தது...
விஷாகன் வருவான் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த மூன்று வருடங்கள் கூட இந்த இரண்டு நாட்களை போல நீளமானதாக இல்லை என்று அவளுக்கு தோன்றியது...
பத்மாவதி பேசிய அந்த ஒரு வாக்கியம் அவளை ஆழமாக காயப் படுத்தியது என்றால், அதன் பின்னே விஷாகன் இருக்கிறான் என்ற தெளிவு அவளை கொல்லாமல் கொன்றது...
விஷாகனுக்கு அவள் மீது எவ்வளவு வெறுப்பு இருந்தால் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுப்படுவான்...
ஒருவேளை அவனை பார்த்த உடனே மனம் திறந்து பேசி இருக்க வேண்டுமோ???
இல்லை... அப்போதும் அவன் அவள் சொல்வதை நம்பாமல் இதே போல வார்த்தைகளால் தான் வருத்தெடுத்திருப்பான்...
அவனுக்கு அவள் மீது துளியும் நம்பிக்கை இல்லை... அவனிடம் இனிமேல் பேசுவது என்று நினைப்பதே கூட வீண்...
அவள் எதிர்பார்த்ததற்கு தலைகீழாக எல்லாம் நடப்பது அவளின் துரதிர்ஷ்டம் தான்...!
எப்படி இருந்தாலும், இதற்கு மேல் விஷாகனுடன் வாழ்க்கை என்ற ஒன்றை அவள் நினைத்தும் பார்க்க முடியாது...
இனி, மேலே என்ன செய்வது என்பதை யோசிக்க வேண்டியது தான்...!
விஷ்ணுப்ப்ரியா இந்த வீட்டின் மருமகள்... எனவே விஷாகன் இனி இவர்களின் நெருங்கிய உறவினன்...
இங்கேயே வேலைக்காரியாக இருப்பது கூட இதற்கு மேல் சரியாக இருக்காது...
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.