This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அந்த பெண்ணின் கேள்வி தமிழ்ச்செல்விக்கு குழப்பத்தைக் கொடுத்தது.
“வெற்றியா? யார் அது?” என்று முதலில் கேட்டவள், அதற்கு பிறகு தான், தான் இருக்கும் இடத்தைப் பற்றி யோசித்தாள்.
எழுந்து அமர்ந்து மீண்டும் அந்த அறையை பார்வையிட்டாள் தமிழ்ச்செல்வி.
நாசியை வருடிய வாசனையும், அருகே இருந்த க்ளுகோஸ் ஏற்றும் கருவியும் அவள் யோசித்ததுப் போல அது மருத்துவமனை என்பதை உறுதி செய்தன.
அங்கிருந்த அமைதியும், தரை, சுவர் என காணும் இடமெல்லாம் தெரிந்த பணக்காரத்தன்மையும் அவளை யோசிக்க வைத்தது.
“நான் எப்படி இங்கே வந்தேன்? எனக்கு என்ன ஆச்சு?”
தமிழ்ச்செல்வியுடைய கேள்வி அந்த பெண்ணிற்கு வேடிக்கையாக இருந்திருக்க வேண்டும்.
“என்ன பொண்ணு நீ? இதை முதலேயே கேட்பேன்னு நினைச்சேன். இவ்வளவு லேட்டா கேட்குற?”
தமிழ்ச்செல்விக்கு அவளின் வேடிக்கை பேச்சு ரசிக்கவில்லை. நெற்றியை தேய்த்தபடி யோசித்தாள்.
ரயிலில் இருந்து இறங்கியதும், ஏதேதோ பேச்சுக் குரல்கள் கேட்டதும், மயங்கி விழுந்ததும் ஞாபகம் வந்தது.
“நான் ரயில்வே ஸ்டேஷன்ல மயங்கி விழுந்தது ஞாபகம் இருக்கு. நீங்க என்னை இங்கே அழைச்சிட்டு வந்து அட்மிட் செய்தீங்களா? ரொம்ப நன்றிங்க!”
“நன்றியா? வாவ், அப்படி ஒரு வார்த்தையை கேட்டே ரொம்ப நாளாச்சு! சரி நீ சொல்லு, யார்
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.