This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“நானும் அவரும் கடைக்கு போனோம் தமிழ். அங்க கண்ணில பட்ட நல்ல டிரஸ்ல நாலஞ்சை உனக்குன்னு வாங்கிட்டு வந்தேன்,” என தமிழ்ச்செல்விக்கு விபரம் சொன்னாள் யசோதா.
“எனக்கா?” என்று அப்போதும் நம்ப முடியாமல் கேட்டாள் தமிழ்ச்செல்வி.
“காலேஜுக்கு போக போற, மாத்தி மாத்தி போட ட்ரெஸ் வேண்டாமா?” என்று யசோதா கேட்கவும்,
மனம் உருகிப் போய் நன்றி சொல்ல கூட தோன்றாமல் நின்றாள் தமிழ்.
“நான் வாங்கினது உனக்கு பிடிக்குதோ என்னமோ! அடுத்த தடவை உன்னையும் கூட்டிட்டு போறேன்.”
“வேணாம் இதுவே நிறைவா இருக்கு க்கா. இதுவரை அப்பாவை தாண்டி யாருமே எனக்கு இப்படி அன்பா வாங்கி தந்தது இல்ல. அப்பா கிட்டேயும் எப்போவும் பணம் இருக்காது, பணம் இருந்தாலும் அவருக்கு சித்தியை பார்த்து பயம்.”
“அதுக்கு எல்லாம் சேர்த்து இப்போ உங்கப்பா தான் என் வழியா உனக்கு வாங்கி தரார்ன்னு நினைச்சுக்கோ தமிழ்.”
“யசு நீயும் இங்கே தான் இருக்கீயா? நல்லதா போச்சு போ!”
சந்திரிகாவின் வருகை அவர்கள் இருவரின் பேச்சுக்கு தடைப் போட்டது.
“என்னை தேடினீங்களா சின்னத்தை? அவர் கூட கடைக்கு போயிருந்தேன்.”
“தேடலை யசு. தமிழ்ச்செல்வி கிட்ட கல்யாணத்துக்கான ஏற்பாடு பத்தி பேச வந்தேன். நீயும் இருந்தா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன், நீயும் இங்கேயே இருக்க!”
“கல்யாண ஏற்பாடா?” என்றாள் தமிழ்ச்செல்வி அதிர்ச்சியுடன்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.