தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
32. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
நந்தினியின் ஆஃபீஸ் அறையை விட்டு வெளியே வந்த உடன் இந்துவின் உதட்டில் தானாக ஒரு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. மாதவி நந்தினியிடம் சொன்ன அதே வாக்கியத்தை பல தடவை அர்ச்சனா அவளிடம் சொல்லி இருக்கிறார். மகளிடம் உள்ள நல்ல குணங்கள் பற்றி சொந்த அம்மாவை விட மற்றவர்களுக்கு தான் புரியும் போல! இதை நினைத்துக் கொண்டே வந்தவள், ஒரே நொடியில் நந்தினி, மாதவி, அர்ச்சனா என அனைவரையும் மறந்துப் போனாள். ஏன், அவளை சுற்றி இருந்த உலகமே அவளுக்கு மறந்துப் போனது... கைகளை பேன்ட் பாக்கெட்களில் விட்டுக் கொண்டு அவளை வரவேற்பது போல் மந்தகாச புன்னகை மின்ன நின்றிருந்த சஞ்சீவ் மட்டுமே அவளுக்கு தெரிந்தான்.
இந்துவை பார்த்ததும் சஞ்சீவின் முகமும் தானாக மலர்ந்தது! அவளின் முகத்தை கவனித்தவன்,
"இது சரியே இல்லை இந்து... யோசிச்சு பதில் சொல்றேன்னு சொல்லி என்னை கட்டிப் போட்டுட்டு... அப்போ அப்போ இப்படி ஒரு ஸ்மைலிங் போஸ் கொடுக்குறது... ஹுஹும்..." என்றான் காதலுடன்!
இந்து பதில் சொல்லாது புன்னகைத்தாள்.
"என்ன பேச்சே காணும்... எப்போவும் இதுக்கு ஒரு ரெடிமேட் பதில் வச்சிருப்பியே?"
"அது இருக்கட்டும்... நான் ஒருவேளை உங்க லவ்வுக்கு நோ'ன்னு பதில் சொல்லிட்டா என்ன செய்வீங்க?"
"நீ அப்படி சொல்லி தான் பாரேன் அப்புறம் என்ன நடக்குதுன்னு..."
"என்ன செய்வீங்க?" என்றாள் இந்து ஆர்வத்துடன்.
"வேற என்ன, அடுத்த முகூர்த்தத்திலேயே வேற ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான்..."