தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
33. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
"நீ சரியான லூசுப்பா... இவ்வளவு நாள் என்ன செஞ்சுட்டு இருந்த? இப்போ கடைசி நிமிஷத்தில வந்து இப்படி தொல்லை பண்ற?" நிஜமான கோபத்தோடு கேட்டாள் வீணா.
"சாரி சாரி... நான் கொஞ்சம் பிஸியா இருந்தேன்..." என்று தோழியிடம் கெஞ்சினாள் இந்து.
மறுநாள் கீதா ராஜீவ் திருமண நாள். அதற்கு சேலைகளுடன், சின்னதாக ஒரு பரிசும் கொடுக்கலாம் என்று வீணாவையும் அழைத்துக் கொண்டு கடைக்கு வந்திருந்தாள் இந்து.
"மண்ணாங்கட்டி... பொய் சொல்லாதே... தினமும் சஞ்சீவ் கூட வெளியே போக மட்டும் உனக்கு நேரம் இருக்கு..."
"அதெல்லாம் ஒன்னும் இல்லை... டெய்லி எல்லாம் போறதில்லை..."
"இந்து, என்கிட்டவே ரீல் சுத்த ஆரம்பிச்சிட்டியா? உனக்கு சஞ்சீவ் எவ்வளவோ பரவாயில்லை.... உண்மையை தான் சொல்றான்..."
"ஹே வீணா! சஞ்சீவை நீ எங்கே பார்த்த?"
இந்து அந்த கேள்வியைக் கேட்ட தோரணையில் அவள் பக்கம் திரும்பி பார்த்த வீணா,
"ஏன், நான் சஞ்சீவைப் பார்த்தா என்ன?" என்றாள்.
"ஒன்னுமில்லை... ஆனால், எங்கே பார்த்த?"
"நேத்து வீட்டுல எல்லோரையும் இன்வைட் பண்ண சஞ்சீவ் வந்திருந்தான்..."
"ஓ!"
"என்ன யோச்சிக்கிற? உன்கிட்ட இது எதுவும் சொல்லலைன்னு தானே? அதையும் சஞ்சீவே சொன்னான்... உன்னையும் கூட கூட்டிட்டு வரனும்னு தான் நினைச்சானாம், ஆனால் டைம்