மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 35 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
டாக்டர் பிரசாத் சத்யாவிற்கு பதில் சொன்ன போது அவர் குரலில் ஆர்வம் தெரிந்தது.
“ஆமாம், நான் இன்ஸ்பெக்டர் கிட்டேயும் சொன்னேன். நீ அன்னைக்கு அந்த சேகரன் விஷயமா தானே என் கிட்ட வந்து பேசின? உனக்கு எதுவும் ப்ராப்ளம் இல்லையே? அந்த லெட்டர் வந்தப்போ எனக்கு என்னவோ போல இருந்துச்சு. எதுக்கு வம்புன்னு தான் இன்ஸ்பெக்டர் கிட்ட சொன்னேன்.”
“சரியா தான் செஞ்சிருக்கீங்க டாக்டர். அன்னைக்கு நான் பேசின விஷயத்தை பத்தி வேற யார் கிட்டேயாவது சொன்னீங்களா என்ன?” சத்யா பொதுப்படையாக பேசுவதுப் போல விசாரித்தாள்!
“அந்த சேகரன் இங்கே ஹாஸ்பிட்டல்ல டெம்பரரியா வேலை செய்துட்டு இருந்தவன். அதைப் பத்தி ஹாஸ்பிட்டல் மேனேஜர், ஹவுஸ்கீப்பிங் ஹெட்ன்னு இரண்டு மூணு மீட்டிங்குல பேசினேன். அப்போ நாம பேசினதை பத்தியும் சொன்னேன்னு நினைக்கிறேன். ஏன் சத்யா? ஏதாவது ப்ராப்ளமா??”
“இல்லை டாக்டர், சாதாரணமா தெரிஞ்சுக்க கேட்டேன். எனக்கு அந்த சேகரன் மேல எந்த அக்கறையும் இல்லை டாக்டர்.”
“அந்த டீச்சர் கல்யாணம் என்ன ஆச்சு?”
“அவங்களுக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு டாக்டர். பத்திரிக்கை அடிச்ச உடனே அவங்க கூட வந்து உங்களை இன்வைட் செய்றோம்.”
“நல்லதும்மா. அந்த பொண்ணுக்கும் என் வாழ்த்துக்களை சொல்லிடு!”
“சொல்றேன் டாக்டர். இந்த கேஸ்லேயும் யாரையோ ஆல்மோஸ்ட் அரெஸ்ட் செய்யப் போறதா பேசிக்கிட்டாங்க. அதனால இதுக்கு மேல உங்களுக்கும் தொல்லை இருக்காதுன்னு நினைக்கிறேன்.”
“ஹப்பா! கேட்கவே சந்தோஷமா இருக்கு. நிறைய அப்பாயின்ட்மென்ட்ஸ் இருக்கு சத்யா. நான்