மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 38 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
சாந்ததுரை எந்த பதற்றமும் இல்லாமல் புன்சிரிப்புடன், “ஏன் சக்தி, என் கிட்ட எப்போவும் இப்படி எரிஞ்சு விழுறீங்க? லேடி ராம்போவோட ஹீரோ ராம்போ யாருன்னு தெரிஞ்சுக்க நான் ஆசைப் படக் கூடாதா?” என்றான்!
“உலகத்துக்கு தேவைப்படுற முக்கியமான ஆசை! என்னை எரிச்சல் படுத்துற மாதிரி எப்போவும் பேசுறதே உனக்கு வேலையா போச்சு. உங்க பாட்டிங்க கான்ஃபரன்ஸ் முடிஞ்சிருச்சா? இன்னைக்கு சீக்கிரமா முடிஞ்சிருச்சு போலருக்கு?” என்ற சக்தி, மீண்டும் தோட்டத்தில் இருந்த பாதையில் மெல்ல நடக்க தொடங்கினாள்!
“ஆமா, எனக்கே போர் அடிச்சிடுச்சு. அதான் சீக்கிரமா எல்லோரையும் அனுப்பி வச்சுட்டேன். இனிமேல் உங்களுக்கு என்னால தொல்லை இருக்காது. நான் என் கிளினிக் திறக்குற வரைக்கும் இந்த ஊருல இருக்க ஹாஸ்பிட்டலேயே ப்ராக்டிஸ் செய்யலாம்னு இருக்கேன்!”
“எந்த ஹாஸ்பிட்டல் அது?”
“ஏ.ஜே.பி மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் கேள்வி பட்டு இருக்கீங்களா?”
“டாக்டர் பிரசாத்தோட ஹாஸ்பிட்டல் ஆச்சே!!!”
“அதே தான். இன்னைக்கு போய் அவர நேரா பார்த்து பேசினேன். ரொம்ப இம்ப்ரஸ் ஆகி உடனே வர சொல்லிட்டார்!”
“இந்த ஊருல இருந்த ஒரே நல்ல ஹாஸ்பிட்டலும் போச்சா,” என சொல்லி, போலியாக அலுப்புடன் பெருமூச்சை வெளியேற்றினாள் சக்தி.
“நான் உங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்ததே இல்லை. அதுக்கு முன்னாடியே இப்படி சொன்னா எப்படி?”
“அந்த ஆசை வேற இருக்கா உனக்கு? நீ நிஜமாவே டாக்டர் தானா?”