தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 68 - பிந்து வினோத்
68. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அன்று கல்லூரிக்கு அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்த பாரதி, அவளின் எதிரில் வந்து நின்ற விவேக்கை கண்கள் விரிய மலர்ச்சியுடன் பார்த்தாள்.
“என்ன அதிசயம், இன்னைக்கு சீக்கிரம் கிளம்பிட்டீங்க?”
பாரதியின் கேள்விக்கு பதில் சொல்லாமல், “ம்ம்ம்... அதே சாரீ...” என்று சொல்லிக் கொண்டே அவள் அருகில் வந்த விவேக்கின் பார்வையில் எதையோ புரிந்துக் கொண்டு பின்னே நகர்ந்தாள் பாரதி.
“ப்ச் விவேக், இன்னைக்கு எனக்கு முக்கியமான க்ளாஸ் இருக்கு, தொல்லை செய்யாதீங்க...”
அவள் பேசும் போதே அவளருகில் மிக நெருங்கி வந்திருந்த விவேக், அவளை வாசனைப் பிடிப்பவனைப் போல மூச்சை உள்ளே இழுத்தான்...
“என்ன வாசனை ரதி...”
“விவேக், ப்ளீஸ்...”
“அதே தான்... ப்ளீஸ்டா ரதி...”
இனி பேசியும் பயனில்லை என்று புரிந்ததாலோ, பேசியப்படி அணைத்த விவேக்கின் அணைப்பில் மயங்கியதாலோ, பாரதி அதன் பின் கணவனுக்கு மறுப்பேதும் சொல்லவில்லை.
அதன் பின் தாமதமாக வீட்டில் இருந்து கிளம்பினார்கள் இருவரும்... வழியில் ட்ராஃபிக் ஜாமினால் கார் நிற்கவும், பாரதி பக்கம் பார்த்த விவேக்,
“ரதி இன்னைக்கு நாம லேட்டா கிளம்புனதுக்கு ஒரு ஸ்பெஷல் ரீசன் இருக்கு... உனக்கு என்னன்னு தெரியுமா?” எனக் கேட்டான்.
தலை அசைத்து, “ஹுஹும்ம்... நீங்களே சொல்லுங்க உங்க ஸ்பெஷல் ரீசனை...” என்றாள்